தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர். (நீதி 30:3)
கர்த்தருடைய வசனம், அதன் மேன்மை மகத்துவத்தைக் குறித்து மறுபடியும், மறுபடியுமாக சொல்லுகிறது. தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள். அதாவது சுத்தமானவைகள். மேலும் சங்கீதம் 12ல் 6ம் வசனம் ;கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தைகளில் குறை ஒன்றுமில்லை.
ஆகவேதான் கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது (சங்கீதம் 19 : 7) தேவனுடைய வார்த்தையை நம்புங்கள். அதின் நம்பகத்தன்மையைக்குறித்து உறுதியாயிருங்கள். அதுவே நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் அஸ்திபாரமாயிருக்கிறது.
வேத வசனங்கள் ஒவ்வொன்றும் தேவ ஆவியினாலே நமக்கு அருளப்பட்டிருக்கிறது அதை நாம் விசுவாசித்து , அதிலே உறுதியாக இருப்போம். ஆமென்.
Write a public review