வசனத்தின் வல்லமை
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 03-Oct-2024



வசனத்தின் வல்லமை

தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள்; தம்மை அண்டிக்கொள்ளுகிறவர்களுக்கு அவர் கேடகமானவர்.   (நீதி 30:3)  

கர்த்தருடைய வசனம், அதன் மேன்மை மகத்துவத்தைக் குறித்து மறுபடியும், மறுபடியுமாக சொல்லுகிறது. தேவனுடைய வசனமெல்லாம் புடமிடப்பட்டவைகள். அதாவது சுத்தமானவைகள். மேலும்  சங்கீதம் 12ல் 6ம் வசனம்  ;கர்த்தருடைய சொற்கள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி, புடமிடப்பட்ட வெள்ளிக்கொப்பான சுத்த சொற்களாயிருக்கிறது. தேவனுடைய வார்த்தைகளில் குறை ஒன்றுமில்லை. 

ஆகவேதான் கர்த்தருடைய வேதம் குறைவற்றதும் ஆத்துமாவை  உயிர்ப்பிக்கிறதுமாயிருக்கிறது. கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது  (சங்கீதம் 19 : 7)  தேவனுடைய வார்த்தையை நம்புங்கள். அதின் நம்பகத்தன்மையைக்குறித்து உறுதியாயிருங்கள். அதுவே நம்முடைய கிறிஸ்தவ வாழ்க்கையின் அஸ்திபாரமாயிருக்கிறது. 

வேத வசனங்கள் ஒவ்வொன்றும் தேவ ஆவியினாலே நமக்கு அருளப்பட்டிருக்கிறது அதை நாம் விசுவாசித்து , அதிலே உறுதியாக இருப்போம். ஆமென்.  





  :   23 Likes

  :   73 Views