மகிமை!- GLORY
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



மகிமை!- GLORY

சங்கீதம், 113:4.   "கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது."  

 அழகு , வல்லமை அல்லது கனம் என்பது மகிமை எனப்படும் . 

 இது தேவனுடைய சுபாவமாகும். 

 தேவனுடைய அதிகாரத்தையும் மகத்துவத்தையும் மகிமை என்னும் வார்த்தை வெளிப்படுத்துகிறது .

  வேதாகமத்தில் மகிமை என்னும் வார்த்தை மூன்று விதமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது . அவற்றின் விவரம் வருமாறு :

1. தேவனுடைய நீதிநெறியின் சௌந்தரியமும் அவருடைய பரிபூரணமும் . மனுஷனுடைய அறிவினால் தேவனுடைய இந்த தெய்வீக சுபாவத்தை புரிந்து கொள்ளமுடியாது . "எல்லா ஜனங்களும் தேவ மகிமை அற்றவர்களாக இருக்கிறோம்."  ( ரோம 3:23 )  . 

2 . தேவன் தம்முடைய பரிபூரணத்தை மனுஷர் காணும் பிரகாரமாக பிரத்தியட்சமாக வெளிப்படுத்தியிருக்கிறார் . 

**தேவன் இஸ்ரவேல் புத்திரரை செங்கடலில் இரட்சித்தார்.  ( யாத் 14 )  , 

**தேவனுடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்திலும்.  ( லேவி 9 : 23-24 )  . 

**தேவாலயத்திலும்  ( 1 இராஜா 8:11 )  பிரசன்னமாக இருந்தது .

 பழைய ஏற்பாட்டுக் காலத்திற்கு பின்பு தேவனுடைய மகிமை இயேசுகிறிஸ்துவிலும்  ( லூக் 9 : 29-32 ; யோவா 2.11 ) ,  அவருடைய சபையின் அங்கத்தினர்களிடத்திலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது . இயேசுகிறிஸ்து தற்போது தம்முடைய தெய்வீக மகிமையை தம்மை பின்பற்றுகிறவர்களோடு பகிர்ந்துகொள்கிறார்.  ( யோவா 17 : 5-6,22 ) . 

3. துதி . தேவனுடைய சிருஷ்டிகள் தேவனை துதித்து போற்றுவது தேவனுடைய மகிமையாக இருக்கிறது.  ( சங் 115 : 1 ; வெளி 5 : 12-13 )  . 

  மகிமைப்படுத்துதல் என்றால்? 

தேவனுடைய நாமத்தை துதிப்பதும் அவருடைய கட்டளைகளை கனப்படுத்துவதும் தேவனை மகிமைப்படுத்துதல் ஆகும் ( சங் 86:12 ) . இயேசுகிறிஸ்து தமது பிதாவின் சித்தத்திற்கு பூரணமாக கீழ்ப்படிந்து நமக்காக சிலுவையில் மரித்ததினால் அவர் தமது பிதாவை கனப்படுத்துகிறார் . ( யோவா 17:1 )  

 நாமும் தேவனாகிய கர்த்தரை, ஆண்டவராகிய இயேசுவைப்போல மகிமைப்படுத்துவொமா!!! ஆமென்! 




  :   17 Likes

  :   66 Views