சங்கீதம், 113:4. "கர்த்தர் எல்லா ஜாதிகள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது."
அழகு , வல்லமை அல்லது கனம் என்பது மகிமை எனப்படும் .
இது தேவனுடைய சுபாவமாகும்.
தேவனுடைய அதிகாரத்தையும் மகத்துவத்தையும் மகிமை என்னும் வார்த்தை வெளிப்படுத்துகிறது .
வேதாகமத்தில் மகிமை என்னும் வார்த்தை மூன்று விதமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது . அவற்றின் விவரம் வருமாறு :
1. தேவனுடைய நீதிநெறியின் சௌந்தரியமும் அவருடைய பரிபூரணமும் . மனுஷனுடைய அறிவினால் தேவனுடைய இந்த தெய்வீக சுபாவத்தை புரிந்து கொள்ளமுடியாது . "எல்லா ஜனங்களும் தேவ மகிமை அற்றவர்களாக இருக்கிறோம்." ( ரோம 3:23 ) .
2 . தேவன் தம்முடைய பரிபூரணத்தை மனுஷர் காணும் பிரகாரமாக பிரத்தியட்சமாக வெளிப்படுத்தியிருக்கிறார் .
**தேவன் இஸ்ரவேல் புத்திரரை செங்கடலில் இரட்சித்தார். ( யாத் 14 ) ,
**தேவனுடைய மகிமை ஆசரிப்புக்கூடாரத்திலும். ( லேவி 9 : 23-24 ) .
**தேவாலயத்திலும் ( 1 இராஜா 8:11 ) பிரசன்னமாக இருந்தது .
பழைய ஏற்பாட்டுக் காலத்திற்கு பின்பு தேவனுடைய மகிமை இயேசுகிறிஸ்துவிலும் ( லூக் 9 : 29-32 ; யோவா 2.11 ) , அவருடைய சபையின் அங்கத்தினர்களிடத்திலும் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது . இயேசுகிறிஸ்து தற்போது தம்முடைய தெய்வீக மகிமையை தம்மை பின்பற்றுகிறவர்களோடு பகிர்ந்துகொள்கிறார். ( யோவா 17 : 5-6,22 ) .
3. துதி . தேவனுடைய சிருஷ்டிகள் தேவனை துதித்து போற்றுவது தேவனுடைய மகிமையாக இருக்கிறது. ( சங் 115 : 1 ; வெளி 5 : 12-13 ) .
மகிமைப்படுத்துதல் என்றால்?
தேவனுடைய நாமத்தை துதிப்பதும் அவருடைய கட்டளைகளை கனப்படுத்துவதும் தேவனை மகிமைப்படுத்துதல் ஆகும் ( சங் 86:12 ) . இயேசுகிறிஸ்து தமது பிதாவின் சித்தத்திற்கு பூரணமாக கீழ்ப்படிந்து நமக்காக சிலுவையில் மரித்ததினால் அவர் தமது பிதாவை கனப்படுத்துகிறார் . ( யோவா 17:1 )
நாமும் தேவனாகிய கர்த்தரை, ஆண்டவராகிய இயேசுவைப்போல மகிமைப்படுத்துவொமா!!! ஆமென்!
Write a public review