திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன் (சங்கீதம் 119:14) .
நாம் நமது வாழ்க்கைக்குத் தேவையான செல்வத்தை நன்றாக சம்பாதிக்க வேண்டும். செல்வம் மட்டுமே நமது வாழ்வின் குறிக்கோளாக இருக்கக் கூடாது. செல்வத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதே சிலருடய வாழ்க்கையின் ஒரே குறிக்கோளாக உள்ளது. ஆனால் நமக்கு கொடுக்கப்பட்ட வேதம், உலக செல்வத்தைவிட மேலானது என்பதை சிலர் எண்ணுவதில்லை. அநேக நேரங்களில் செல்வம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்குமென்று எதிர்பார்த்த எதிர்பார்ப்பு நம்மில் நிறைவேறுவது இல்லை. அதற்குப் பதிலாக அநேக துன்பங்களும் துயரங்களும் ஏற்படுகிறது. எதிர்பார்ப்பின் ஏமாற்றத்தை நாம் சந்திக்கும் பொழுது, அது மனதை பாதிக்கிறது. பணத்தினால் நாம் அநேக காரியங்களைச் சாதிப்போம் என்றாலும், மன நிறைவை அனுபவிக்க கர்த்தர் மட்டுமே உதவி செய்ய வேண்டும்.
சங்கீதக்காரன் அழிந்து போகாத நித்தியமான செல்வத்தைக் குறித்துப் பேசுகிறார். இந்த இடத்தில் தன்னுடைய இருதயத்தில் நிறைவான சந்தோஷம் அளிக்கும் மகிழ்ச்சியைக் குறித்துப் பேசுகிறார். ஆண்டவருடைய சத்தியம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். (சங்கீதம் 119:72) என்று சொல்லுகிறார். வாழ்க்கையில் வேதத்தில் களிகூர முடியவில்லையென்றால், நாம் ஆவிக்குரிய வாழ்க்கையில் சரியாக இல்லை என்று தான் அர்த்தம். வேதம் தேவனுடைய வார்த்தை, தேவனுடைய சத்தம். ஆண்டவருடைய சத்தியம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும். ஆமென்.
Write a public review