விசுவாசம் - (BELIEVE, FAITH)
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



விசுவாசம் - (BELIEVE, FAITH)

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்று ஆபகூக் தீர்க்கதரிசி கூறியிருக்கிறார்  (ஆப 2:4)

தேவனிடத்தில் நமது முழுமனதோடும் முழு ஆத்துமாவோடும் விசுவாசம் வைக்கவேண்டும்.  (ரோம 1:16; 3:22)

விசுவாசம் ஆவியின் கனியில் ஒரு பங்காகும்.

விசுவாசம் என்பது நம்முடைய வாழ்க்கையில் ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு நாம் தேவனிடம் வைக்கும் நம்பிக்கை ஆகும். ஆனால் நாம் எதைப் பெற்றுக் கொள்வதற்கு அவரிடம் விசுவாசம் வைக்கிறோம் என்பது மிக முக்கியம். உலக பொருள்கள் அல்லது உலகத்தில் நாம் வாழ்வதற்கு தேவையான ஒரு காரியத்தில் நாம் அவரிடம் விசுவாசம் வைக்கிறோம் அதில் தவறு எதுவும் இல்லை. அது தேவைதான். ஆனால் அதில் தேவசித்தம் இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட காலம் வாழப் போகிற இந்த உலகம் , உலகம் சார்ந்த விஷயத்தில் நாம் விசுவாசம் வைக்கும்பொழுது, நித்திய நித்திய காலமாக வாழப் போகிற அந்த வாழ்க்கைக்கு அதைப் பெற்றுக் கொள்வதற்கு நாம் அவரில் அதிகமான விசுவாசத்தில் நிலைத்திருந்து அதை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

என்னுடைய பார்வையில் தேவனுடைய சத்தியத்தில் நமது நம்பிக்கையை வைப்பதே விசுவாசம்! கர்த்தருடைய வார்த்தையை நம்பி நம்முடைய பரிபூர்ண இரட்சிப்புக்காக அவரையே சார்ந்திருக்கவேண்டும்.  சங்கீதம் 119:49,50

 இந்த வசனத்தில் தாவீது ஜெபிப்பது போல் நாமும் ஜெபம் பண்ண வேண்டும்.

இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பது என்பதில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று கர்த்தரைச் சார்ந்திருப்பது. மற்றொன்று கர்த்தரிடத்தில் நம்முடைய ஜீவனை ஒப்புக்கொடுப்பது.

கிறிஸ்தவ ஜீவியத்தில் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையிலும் விசுவாசம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.

விசுவாசம் என்பது வேறு சுயநம்பிக்கை என்பது வேறு. மெய்யான விசுவாசம் என்பது சுய நம்பிக்கையைச் சார்ந்திராமல் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை சார்ந்திருப்பதாகும்...

நாம் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைத்து ,வேத வசனத்தில் உறுதியாக இருந்து விசுவாசத்து நித்திய வாழ்வைப் பெற்றுக் கொள்வோம். ஆமென்




  :   21 Likes

  :   61 Views