மத்தேயு 5:19."ஆகையால், இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் பெரியவன் என்னப்படுவான்."
இன்று நாம் வாழும் இந்த உலகத்தில் மனிதர்களுக்கிடையே மிகப்பெரிய ஒரு போட்டி, "நீ பெரியவனா நான் பெரியவனா?" இது எல்லா வீடுகளிலும் இருக்கிறது; நாம் வேலை செய்யும் அலுவலகத்தில் இருக்கிறது; சபைகளுக்குள்ளும் இருக்கிறது; ஏன் அனேக ஊழியர்களுக்கும் இது இருக்கிறது.
வேதம் நமக்கு சொல்கிறது என்னவென்றால் இந்த உலகத்தில் பெரியவனாக இருப்பது முக்கியமல்ல, பரலோகராஜ்யத்தில் யார் பெரியவன் ஆக இருப்பான் என்பது தான் முக்கியம்.
மத்தேயு 5:3-16
இந்த வசனத்தில் சொல்லப்பட்ட கற்பனைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவனாக இருப்பான் . கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே! நாம் ஒவ்வொருவரும் இந்த கற்பனைகளைக் கைக்கொண்டு, தேவனுடைய ராஜ்யத்தில் பெரியவர்களாக இருப்போம். ஆமென்.
Write a public review