நீங்கள் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டீர்கள்; மனுஷருக்கு அடிமைகளாகாதிருங்கள் (1 கொரி 7:23).
நாம் எல்லோரும் ஆண்டவரால் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டவர்கள். பாவத்திலிருந்து ஆண்டவர் விடுதலையாக்கி மீட்டுக்கொண்டார். அவருக்கென்று வாழும்படி, அவர் தம்முடைய உன்னதமான பலியைச் செலுத்தி மீட்டுக்கொண்டார். நம்முடைய வாழ்க்கையில் நாம் தேவனை மகிமைப்படுத்தும்படி வாழ்வதே தேவனுடைய விருப்பமாக இருக்கிறது.
அவரிடத்தில் அன்புகூர்ந்து அவர் எதிர்பார்க்கிற காரியத்தை நிறைவேற்றும்படியாக நியமிக்கப்பட்டு இருக்கிறோம். நாம் மனிதனுக்கு அடிமையாகக் கூடாது.
சிலர் சபை பிரிவுகளுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். பிதா, குமாரன், பரிசுத்த ஆவியானவரை தொழுது கொள்கிற எல்லா பிரிவுகளையும் நாம் மதிக்க வேண்டும். நேசிக்க வேண்டும்.
சிலர் ஊழியர்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். அவர்களை கண படுத்தவேண்டும், அவர்களுடைய வார்த்தைகளுக்கு கீழ்படிய வேண்டும். அடிமைகளாக இருக்க வேண்டாம்.
சிலர் பாரம்பரியத்திற்கும், மனிதனுடைய வழக்கத்திற்கும் அடிமைகளாக இருக்கிறார்கள். வேத வசனத்துக்கு கீழ்ப்படிவோம்.
சிலர் தங்களுடைய எஜமான்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். அவர்களுக்குக் கீழ்ப்படிந்து, உண்மையாக வேலை செய்ய வேண்டும். அடிமைத்தனம் வேண்டாம்.
வாழ்க்கையில் நீங்கள் கிறிஸ்துவிற்கு தான் அடிமை. மனிதனுக்கும், பாரம்பரியத்துக்கு அல்ல என்பதை மறவாதீர்கள். ஆமென்.
Write a public review