புதிய-வருடம் 1. மகிமையின் கிரீடத்தினால் முடிசூட்டப்போகிறார்* சங்கீதம் 8:5 நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். மனிதனை உன்னதமான திறமைகளால், திறன்ககளால், மனிதனுக்குள் தன்னுடைய இருப்பை கொடுப்பதன் மூலமும், கர்த்தர் மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டுகிறார். மனிதன் வெட்கப்பட்ட இடத்தில் உயர்த்தவும், விழுந்து போன இடத்தில் தூக்கி விடவும் கர்த்தர் கண்நோக்கமாய் இருக்கிறார். இன்று கர்த்தருடைய இந்த வார்த்தையை நாம் விசுவாசித்து அவரோடு ஐக்கியமாக இருக்கும்பொழுது , அவருடைய மகிமை உங்கள் மேல் காணப்படும்.
புதிய வருடம்
"வருஷத்தை உம்முடைய நன்மையால் முடிசூட்டுகிறீர் " சங்கீதம் 65:11
கர்த்தர் நமக்கு எப்படிப்பட்ட நன்மையினால் முடிசூட்டப்போகிறார் ?
*1. மகிமையின் கிரீடத்தினால் முடிசூட்டப்போகிறார்*
சங்கீதம் 8:5
நீர் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும் கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர்.
மனிதனை உன்னதமான திறமைகளால், திறன்ககளால், மனிதனுக்குள் தன்னுடைய இருப்பை கொடுப்பதன் மூலமும், கர்த்தர் மகிமையினாலும், கனத்தினாலும் முடிசூட்டுகிறார். மனிதன் வெட்கப்பட்ட இடத்தில் உயர்த்தவும், விழுந்து போன இடத்தில் தூக்கி விடவும் கர்த்தர் கண்நோக்கமாய் இருக்கிறார். இன்று கர்த்தருடைய இந்த வார்த்தையை நாம் விசுவாசித்து அவரோடு ஐக்கியமாக இருக்கும்பொழுது , அவருடைய மகிமை உங்கள் மேல் காணப்படும்.
* 2. கிருபையின் கிரீடத்தினால் முடிசூட்டப்போகிறார்*
சங்கீதம் 103:4
உன் பிராணனை அழிவுக்கு விலக்கி மீட்டு, உன்னைக் கிருபையினாலும் இரக்கங்களினாலும் முடிசூட்டி, அவருடைய நித்திய கிருபையின் கிரீடத்தை தர விரும்புகிறார். அவர் அன்பும் கருணையும் நிறைந்தவர்; கர்த்தரின் அன்பு மற்றும் கனிவான கருணையிலிருந்து கிடைக்கும் மற்ற எல்லா ஆசீர்வாதங்களுடனும், நித்திய உடன்படிக்கையின் எல்லா ஆசீர்வாதங்களுடனும், பரிசுத்தவான்கள் கிறிஸ்துவில் ஆசீர்வதிக்கப்பட்ட அனைத்து ஆசீர்வாதங்களும், மீளுருவாக்கத்தில் கொடுக்கப்பட்ட வாழ்க்கை மற்றும் தெய்வபக்தி தொடர்பான அனைத்தும் கொண்டு "முடிசூட்டுவது".
*3. அறிவின் கிரீடத்தினால் முடிசூட்டப்போகிறார்*
நீதிமொழிகள் 14:18
பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
விவேகமுள்ளவர்கள் தங்கள் செயல்களை நன்றாகப் பார்ப்பதன் மூலம் பெறும் அறிவு அவர்களை கிரீடமாக அலங்கரிக்கிறது. இதன் மூலம் அவர்கள் மெய்யான சமாதானத்தையும், கர்த்தரை அறிகிற அறிவையும் பெற்றுக் கொள்கிறார்கள். மனதார அதைத் தழுவுங்கள். அறிவின் கிரீடத்தினாலும் முடிசூட்டுவார்.
கிறிஸ்துவை விசுவாசித்து ,அவருக்குள் வாழ்கிற எல்லாரையும் அவர் இப்படிப்பட்ட நன்மையால் முடிசூட்டுகிறீர். இந்த வருடத்தில் நாம் அந்த ஆசிர்வாதங்களை பெற கர்த்தருக்குள் நிலைத்திருப்போம். ஆமென்
Write a public review