நமக்கு நியமித்திருக்கிற ஓட்டம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 03-Oct-2024



நமக்கு நியமித்திருக்கிற ஓட்டம்

விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;  ( எபிரேயர்12:1)  

பொதுவாக இன்று உலகில் மனிதர்கள் மற்றவர்களைப் பார்த்து அவர்களைப்போல தங்கள் வாழ்க்கை அமையவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.   ஒவ்வொருவருக்கும் தேவன் ஒரு பாதையை  நியமித்திருக்கிறார். உலகில் ஒருவர் எல்லாவற்றிலும்  மற்றவரைப் போல இருப்பதில்லை என்பது உண்மை. அவ்விதமாக ஒருவர் வாழ்க்கைப் பாதை மற்றொருவருடையதைப் போலவே இருக்காது.   இன்றைக்கு அநேகர் அநேக சமயங்களில் மற்றவர்களைப் பார்த்து எனக்கு அவ்விதமான வாழ்க்கை இல்லையே என்று ஏங்குவதுண்டு. அவ்விதம் எனக்கு இருந்தால் எவ்வளவு நன்றாய் இருக்கும் என்று மற்றவர்களைப் பார்த்து தன்னை சலித்துக்கொள்வதும் உண்டு. இதனால் தேவனுடைய உன்னத திட்டத்திற்கு எதிர்த்து நிற்கிறவர்களாய் காணப்படுவோம். 

தேவன் வைத்திருக்கிற பாதையை அறிந்து அதை ஏற்றுக்கொண்டு. அது எப்படிப்பட்ட பாதையாக இருந்தாலும் அதில் ஓட வேண்டும்.  அவைகளுக்காக தேவனைத் துதிக்க வேண்டும். அவைகளின் மத்தியில் கடந்து போக தேவன் கிருபை தருவார்.  இந்த பாதையில்  நன்றாய் ஓட நமக்கு பொறுமை தேவை என்பதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது. ஆமென். 





  :   20 Likes

  :   71 Views