நன்றாக வாழ்ந்திட
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



நன்றாக வாழ்ந்திட

 கொலோசெயா 3:23,24 நீங்கள் கர்த்தராகிய கிறிஸ்துவைச் சேவிக்கிறதினாலே, சுதந்தரமாகிய பலனைக் கர்த்தராலே பெறுவீர்களென்று அறிந்து, எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள். 

தேவனுக்காக நான் நன்றாக வாழ வேண்டும் என்று நான் சிந்தித்து செயல்படும் போது, எனக்காக என் வாழ்வை நன்றாக வாழ முடிகிறது.கர்த்தர் எனக்காக செயல்படுகிறார் என்பதை நன்றாக உணர முடிகிறது.

 எனக்காக, என் வாழ்க்கைத் துணைக்காக, என் பெற்றோருக்காக, என் பிள்ளைகளுக்காக ,என் நண்பர்களுக்காக என்று வாழும்போது நோக்கம் சரியாக நிறைவேறுவதில்லை. 

ஆனால் தேவனுக்காக அர்ப்பணித்து வாழும் பொழுது ,நமக்கு கிடைத்த நல்ல வாழ்வும் , தேவ கிருபை யோடு நாம் வாழ்கின்ற அந்த நல்ல வாழ்க்கையாலும்,நம்மோடு கூட இருக்கிற அப்பா ,அம்மா வாழ்க்கை துணை, சகோதரர்கள், நண்பர்கள் எல்லோரும் அந்த ஆசீர்வாதத்தை பெறுகிறார்கள். தேவனுக்காக வாழ்கிற நம்முடைய வாழ்க்கை ஆசீர்வாதமாகவும் பிறரை மகிழ்விக்கும் வாழ்வாக மாறுகிறது . கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய் செய்வோம் கர்த்தருக்கென்று வாழ்வோம்.ஆமென். 





  :   17 Likes

  :   58 Views