மாற்கு 16:15. "பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்."
உலக வேலைக்கு எடுக்கிற பிரயாசம் சிறு வயது முதல்கொண்டு தொடங்கிவிடுகிறது. பள்ளிக்கு செல்லும் முன்பே பல சிறு பாடல்களும், ஆங்கிலம், தமிழ் எழுத்துக்களும் சொல்ல எதிர்பார்க்கிறோம்.
பள்ளி பாடங்களுடன் சேர்ந்து ஓவியம், பாட்டு, போன்றவற்றிலும், எல்லா விதத்திலும் திறமை உள்ளவர்களாக இருக்க விரும்புகிறோம். இது தவறல்ல. எதிர்கால வாழ்க்கைக்கு தானே.
இயேசு கிறிஸ்து ஒரு திட்டத்தோடு இந்த உலகத்திற்கு வந்தார். ஆம் பாவிகளை இரட்சிக்க அவர் வந்தார்.
இன்று நமக்கு தேவ வேலை என்று ஒன்று இருப்பதை அநேகர் அறியாதிருக்கிறோம். அறிந்தாலும் அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. நம் தேவ வேலை என்ன என்று தெரியுமா?
ஒவ்வொருத்தருக்கும் தனித்தன்மையான ஒரு தேவ திட்டம் உண்டு. ஆனால் பொதுவாக எல்லோருக்கும் சுவிசேஷத்தை அறிவிப்பதற்கும், நற்கிரியைகளை செய்வதற்கும், நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் சிருஷ்டிக்க பட்டிருக்கிறோம்.
தாவீதை ராஜாவாகவும், சாமுவேலை தீர்க்கதரிசியாகவும் அபிஷேகம் பண்ணின தேவன், இன்று நமக்கென்று ஒரு திட்டத்தை வைத்திருக்கிறார். அந்த திட்டத்தை நாம் ஜெபித்து, அறிந்து, கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, நம் வாழ்வில் நிறைவேற்றுவோம். உலக வாழ்க்கைக்கு பிரயாசப்படுவதை விட, நித்திய வாழ்க்கைக்கு அதிகமாக பிரயாசப் படுவோம். ஆமென்.
Write a public review