மத்தேயு, 10 : 29 "ஒரு காசுக்கு இரண்டு அடைக்கலான் குருவிகளை விற்கிறார்கள் அல்லவா? ஆயினும் உங்கள் பிதாவின் சித்தமில்லாமல், அவைகளில் ஒன்றாகிலும் தரையிலே விழாது."
மிகச்சிறிய காரியங்களிலும் தேவனுடைய ஆளுகையிருக்கிறது என்பதை வேதம் தெளிவாகப் போதிக்கிறது. அவருடைய ஆளுகையில்லாத ஒரு சிறிய இடத்தையும் நாம் சொல்லமுடியாது. அவரே எங்கும் வியாபித்திருக்கிறவர். வானம் அவருக்கு சிங்காசனம், பூமி அவருடைய பாதப்படி, அவருக்கு மறைவானது ஒன்றுமில்லை.
மிகவும் அற்பமாய் எண்ணப்படுகிற அடைக்கலான் குருவியைப் பாருங்கள். அவைகளில் ஒன்றையாகிலும் தேவனுடைய சித்தமில்லாமல் எந்த ஒரு மனிதனும் வீழ்த்தமுடியாது. மிகச்சிறிய அடைக்கலான் குருவி காரியங்களிலும் தேவனுடைய சர்வ ஆளுகை பலமாக இருக்கும் பொழுது நம்முடைய வாழ்க்கையில் ஏற்படுகிற மிகச்சிறிய காரியத்திலும் தேவனுடைய சித்தம் இருக்கிறது என்பதை நாம் விளங்கிக்கொள்ளமுடியும். தேவனை மகிமைப் படுத்துவோம்.
இவ்விதமான சர்வஞானம் நமக்கு எவ்விதம் பொருந்துகிறது? தேவன் அறியாமல் நம்முடைய வாழ்க்கையில் மிகச்சிறிய காரியமானாலும் நடைபெறாது என்ற அறிவு நம்மை வாழ்க்கையின் ஒவ்வொரு ஏமாற்றங்களிலும், தோல்விகளிலும், கஷ்டங்களிலும் நம்மை ஆறுதல்படுத்தட்டும். ஆமென்.
Write a public review