திரளான யோசனை
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



திரளான யோசனை

உன் திரளான யோசனைகளினால் நீ இளைத்துப்போனாய்  (ஏசாயா 47 :13)  

  யோசனை செய்வது தவறு என்று வேதம் சொல்லவில்லை. ஆனால் அந்த யோசனை எந்தவிதமானது, எப்படிப்பட்டது என்பதில் தான் பிரச்சனை. இந்த அதிகாரம் முழுவதையும் வாசித்துப் பார்பீர்களானால்,  இஸ்ரவேல்  மக்கள் தங்கள் யோசனைக்கு உதவி செய்ய யாரைத் தேடுகிறார்கள் என்றும் பார்க்க முடியும். ஜோசியரையும், நட்சத்திரம் பார்க்கிறவர்கலையும், அம்மாவாசை பார்க்கிறவர்கலையுமே. வேதத்தை விட்டு இருளைத் தாங்களாகவே தெரிந்து கொள்ளுவது அழிவைத் தேடிக்கொள்வதாகும். 

இன்று நாள், நேரம், வாஸ்து இப்படிப்பட்ட அண்ணிய காரியங்களை பார்க்கிற கிறிஸ்தவர்கள் உண்டு. இவ்விதமான மக்கள் தங்கள் யோசனைகளினால் நடத்தப் படுகிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் மெய்யான தேவ ஆசீர்வாதத்தைப் பார்க்க முடியாது. எவ்வளவு ஞானமாக அவர்கள் யோசனை செய்து திட்டமிட்டுச் செய்தாலும் தேவன் அதில் இருக்கமாட்டர்.  

இன்றைக்கு பக்தியையும், யுக்தியையும் இணைக்கும் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவத்தோடு புறஜாதியாரின் பழக்க வழக்கங்களையும் செய்கிறார்கள். ஆனால் கிறிஸ்துவின் அன்பை ருசிப்பார்த்த  கிறிஸ்தவன் தன் செய்கைகளைக் கர்த்தருக்கு ஒப்புவிக்கிறான். அவன் யோசனைகள் உறுதிப்படும்.  (நீதி 16 : 3)  அவன் தேவனை மாத்திரமே எல்லாவற்றிற்கும் சார்ந்து செயல்படுவான். வேதத்தை அவன் தன் வழிகாட்டியாய்க் கொண்டிருப்பான். நாமும் அவ் வழி நடப்போம். ஆமென். 





  :   19 Likes

  :   63 Views