தேன்! தேனீ! தேன் கூடு!
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



தேன்! தேனீ! தேன் கூடு!

பழைய ஏற்பாட்டில் தேன் என்னும் வார்த்தை பல இடங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கானான் தேசம் பாலும் தேனும் ஓடும் தேசமாகும் ( எண் 14 : 8 ) .

சிம்சோனின் விடுகதையில் தேனைப் பற்றி குறிப்பிடப்பட்டிருக்கிறது ( நியா 14 )

யோனத்தான் , சவுல் ஆகியோருடைய வரலாற்றிலும் தேனைப் பற்றிய குறிப்பு உள்ளது { 1 சாமு 14 ) .

தேன் என்னும் வார்த்தை அடையாளமாக பயன்படுத்தப்படும் போது அது தாராளத்தை குறிக்கிறது ( யாத் 3 : 8 ; 13 : 5 ;33 : 3 )

விசுவாசிகள் தேவனுடைய வார்த்தையில் பிரியமாக இருக்கவேண்டும் ( சங் 19.10 ; 119 : 103 ) .

தேவனுடைய நீதியான வார்த்தை அவருடைய ஜனங்களுக்கு தேனைப் போல இனிக்கும். ( எசே 3 : 3)

கானான் தேசத்தார் தேனீ வளர்த்து தேன் சேகரிப்பதைத் தங்கள் தொழிலாகக் கொண்டிருந்தார்கள் .

எகிப்து தேசத்தில் யோசேப்பு இருந்தபோது , யாக்கோபு அவருக்கு அனுப்பிய வெகுமதிகளில் தேனும் இடம் பெற்றிருந்தது. ( ஆதி 43.11 ) .

இஸ்ரவேல் தேசத்தார் தீருவில் தேன் வியாபாரம் பண்ணினார்கள். ( எசே 27:17 )

செத்துப்போன சிங்கத்தின் சரீரத்திலும் தேன்கூடு இருந்திருக்கிறது. ( நியா 14 : 8 )

*தேன்கூடு!* (HONEYCOMB)

தேனீக்கள் கட்டியிருக்கும் கூடு .

யோனத்தான் தன் கையிலிருந்த கோலை நீட்டி அதன் நுனியினால் தேன்கூட்டை குத்தி தன் வாயிலே போட்டுக்கொண்டான் . அதினால் அவன் கண்கள் தெளிந்தது ( 1 சாமு 14:27 ) ;

கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் சுத்தமும் , என்றைக்கும் நிலைக்கிறதுமாயிருக்கிறது ; கர்த்தருடைய நியாயங்கள் உண்மையும் , அவைகள் அனைத்தும் நீதியுமாயிருக்கிறது . அவைகள் பொன்னிலும் , மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும் , தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது ( சங் 19.9,10 ) .

இனிய சொற்கள் தேன்கூடுபோல் ஆத்துமாவுக்கு மதுரமும் , எலும்புகளுக்கு ஔஷதமுமாகும். ( நீதி 16:24 ) 

திருப்தியடைந்தவன் தேன்கூட்டையும் மிதிப்பான் ; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும். { நீதி 27 : 7 ) .

இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த பின்பு சீஷர்கள் அவருக்கு புசிக்க பொரித்த மீன் கண்டத்தையும் தேன்கூட்டு துணிக்கையையும் கொடுத்தார்கள். ( லூக் 24:42 ) .




  :   21 Likes

  :   69 Views