சங்கீதம் 119:71. " நான் உபத்திரவப்பட்டது எனக்கு நல்லது; அதினால் உமது பிரமாணங்களைக் கற்றுக்கொள்ளுகிறேன்."
இந்த உலகத்திலே உபத்திரவங்களை சந்திக்காத எந்த மனிதனும் இருக்க முடியாது. சில சூழ்நிலையில் ஏதோ ஒரு காரியத்தில் உபத்திரவங்களை எல்லோரும் சந்திக்கிறோம். ஆனால் கர்த்தருடைய கிருபை யார் மேல் இருக்கிறதோ, அவருடைய உபத்திரவம் நன்மைக்கு ஏதுவாக முடிகிறது . தாவீதுக்கு சவுலால் அனேக உபத்திரவங்கள் இருந்தது. இறுதியில் நன்மைக்கு ஏதுவாக முடிந்ததும் நாம் அறிவோம்.
தாவீது மாத்திரமல்ல , யோசேப்பு போன்ற அநேக விசுவாசிகளும் இந்த வசனத்தை மனப்பூர்வமாக அறிக்கை செய்வார்கள். சில உபத்திரவம் நம்முடைய ஆத்தும நன்மைக்காக அனுமதிக்கப்பட்டவை என்றும், அதை கடந்து செல்ல தேவன் நமக்கு பலன் கொடுத்தார் என்றும் தெளிவாய் நாம் அறிய வேண்டும்.
உபத்திரவங்களை கடந்து செல்வதில் நம்முடைய மனப்பான்மை மிக முக்கியம். உபத்திரவங்கள் மத்தியிலும் தேவ சமாதானம் என் வாழ்க்கையில் ஆளுகை செய்ய வேண்டும் என்றும், ஒவ்வொரு சம்பவங்களிலும் ஒரு ஆவிக்குரிய பாடத்தை நாம் பெற்றுக் கொள்கிறோம் என்றும், அது பிற்காலத்தில் நீதியாகிய சமாதான பலனை தரும் என்றும் அறிந்து கொள்ள வேண்டும்.
உபத்திரவங்கள் மத்தியிலும் தேவ ஐக்கித்தோடு வாழ்ந்து, நித்திய வாழ்வை பெற்றுக்கொள்வோம். ஆமென்.
Write a public review