லூக்கா 24:45. "அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி:"
மனிதன் தன்னுடைய அறிவை கொண்டு உலகத்தில் உள்ள சில காரியங்களை புரிந்து கொள்ளலாம். ஏன் புதிய அறிவியல் படைப்புகளையும் கண்டுபிடிக்கலாம். மனிதனால் எழுதப்பட்ட புத்தகத்தை மனிதன் எளிதாக புரிந்து கொள்ளலாம் .
ஆனால் வேத வசனங்கள் ஒவ்வொன்றும் ,நமக்கு தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட வேதவசனங்களின் உண்மையான அர்த்தங்கள் நமக்கு புரிய வேண்டுமென்றால் , ஆவியானவர் நம் மனக் கண்களை திறந்தால் மட்டுமே அது சாத்தியம். கர்த்தரால் நமது மனம் திறக்கப்பட்டால் தான் வேதத்தில் உள்ள உண்மைகளை நாம் சரியாக அறிந்து கொள்ள முடியும்.
வேதத்தை சரியாக அறிந்து கொள்வதற்கும், அதன் ரகசியங்களை அறிந்து கொள்வதற்கும் ஊக்கமான ஜெபத்தினாலும், ஆவியானவருடைய உதவினாலும் தான் அறிந்துகொள்ளமுடியும். தங்களது சொந்த மூளை அறிவில் அறிந்து கொள்ள முயற்சிப்பதால் அநேகர் தவறாக புரிந்து, தவறாக போதிக்கிறார்கள். நாம் எச்சரிக்கையாக இருப்போம். ஆமென்.
Write a public review