கலாத்தியர் 1: 10. "நான் இன்னும் மனுஷரைப் பிரியப்படுத்துகிறவனாயிருந்தால் நான் கிறிஸ்துவின் ஊழியக்காரனல்லவே.
சிலருடைய போதனைகள் மனிதர்களை பிரிய படுத்துவதாக அமைகிறது. வேதத்துக்கு எதிரான கருத்துக்கள் வரும்போது . வேத வசனத்தை அறிந்த நாம், வேத வசனத்தை கொண்டு அந்தக் கருத்தை தவறு என்று சுட்டிக் காட்டலாம். பிறரால் ஏளனம் செய்யப்பட்டுவிடுவோமோ என்பதைக் குறித்து நாம் கவலைப் படக்கூடாது.
பவுல், அவரைச் சுற்றியிருந்த மக்களால் ஏற்பட்ட அழுத்தத்தை பொருட்படுத்தாது, யாருக்கு ஊழியம் செய்கிறோம் என்பதை தெளிவாக அறிந்திருந்தார். மனிதனுடைய அங்கீகாரமல்ல தேவனுடைய அங்கீகாரமே முக்கியம். மனித அங்கீகாரத்தையல்ல தேவனுடைய அங்கிகாரத்தை பெறுவதையே முக்கிய நோக்கமாகக் கொண்டிருந்தார்
அது போலவே நாமும் கிறிஸ்துவின் ஊழியக்காரராக இருக்கிறோம். மக்கள் நம்மை மதிக்கிறார்களோ அவமதிக்கிறார்களோ என்பது முக்கியமல்ல. நாம் தேவனுக்கு ஊழியம் செய்கிறோம் என்பதே முக்கியம். ஒரு நாள் நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக் குறித்துத் தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான் (ரோமர் 14:12) அப்படி என்றால் மக்கள் நம்மைப் பற்றி என்ன எண்ணுகிறார்கள், என்ன பேசுகிறார்கள் என்பதைக்குறித்துக் கவலைப்படவே வேண்டாம் என்று அர்த்தமல்ல, ஆனால் நமது இறுதி நோக்கம் தேவனை; பிரியப்படுத்துவதே ஆகும். நல்லது, உத்தமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே (மத்தேயு 25: 23) என்று நமது இரட்சகர் நம்மிடம் கூற பிரயாச படுவோம். ஆமென்.
Write a public review