கிறிஸ்தவர்கள் யோகா செய்யலாமா?
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



கிறிஸ்தவர்கள் யோகா செய்யலாமா?

யோகாவில் மூன்று வகையான உட்பிரிவுகள் உள்ளது. அது

1) சரீர உடற்பயிற்சி,

2)  மனதியானம்,

3) மந்திரம் ஓதுதல்.

  

1) உடற்பயிற்சி:  

  செய்வதில் எந்த தவறும் கிடையாது , அது எல்லா மனிதருக்கும் தேவையானது. இன்றியமையாதது.  1 தீமோத்தேயு 4 :7-9  "சரீர முயற்சி அற்ப பிரயோஜனம் உள்ளது" என்றும் ஆவிக்குரிய பயிற்சி மிக முக்கியம் என்றும் பவுல் கூறுகிறார். உலகத்தில் வாழும் வரை உடற்பயிற்சி நமக்கு தேவை தான். ஆனால் ஆவிக்குரிய பயிற்சி இம்மைக்கும் மறுமைக்கும் தேவையாயிருக்கிறது. 

   2)தியானம் :  

  இது ஒரு மனிதனுடைய மனதின் எண்ணங்களை வெறுமையாக்கி தியானம் செய்வது. மன உளைச்சலில் இருக்கும் ஒரு நபருக்கு இப்படிப்பட்ட பயிற்சிகளை அளித்து, அவர்களை அதிலிருந்து விடுவிக்கிறோம் என்று சொல்லி பயிற்சி கொடுக்கிறார்கள். இது வேதாகமத்திற்கு புறம்பானது. வேதத்தின்படி நமது மனது வெறுமையாக இருக்கக் கூடாது.  சங்கீதம் 1:2  இல் "இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்க" வேண்டுமென்றிருக்கின்றது.   ரோமர் 12: 2  இல் உங்கள் மனம் புதிதாக வேண்டும் என்றிருக்கிறது; வெறுமையாக இருக்க வேண்டும் என்று இல்லை . மனம் வெறுமையாக இருக்கும் பொழுது பிசாசு சுலபமாக மனதுக்குள் குடியேற முடியும்.  இப்படிப்பட்ட பயிற்சிகளை செய்யக்கூடாது. 

   3) மந்திரம் ஓதுதல் : 

ஒரு மந்திரத்தைத் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பது வேதத்தின்படி தவறு .  மத்தேயு 6:7  இல் வீண் வார்த்தைகளை திரும்பத் திரும்ப சொல்லக்கூடாது என்று இயேசு கிறிஸ்து நமக்கு சொல்லி இருக்கிறார். 

  இப்படிப்பட்ட பயிற்சிகளை தவிர்ப்போம். 

  நல்ல உடற் பயிற்சிகளைச் செய்வோம், எல்லாவற்றிற்கும் மேலாக ஆவிக்குரிய பயிற்சி மிக அவசியம். ஆமென். 

  




  :   21 Likes

  :   61 Views