கொஞ்சத்திலே உண்மையாயிரு
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



கொஞ்சத்திலே உண்மையாயிரு

 "கொஞ்சத்திலே உண்மையுள்ளவன் அநேகத்திலும் உண்மையுள்ளவனாயிருக்கிறான், கொஞ்சத்திலே அநீதியுள்ளவன் அநேகத்திலும் அநீதியுள்ளவனாயிருக்கிறான்."  (லூக்கா 16:10).  

அநேகர் தங்களுடைய வாழ்க்கையில், 'பெரிய காரியங்களில் நான் உண்மையாக இருப்பேன்' என்று சொல்லுவதை நாம் கேட்டிருக்கிறோம். ஆனால் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த இடத்தில் கொஞ்சத்தைக் குறித்துப் பேசுகிறார். கொஞ்சத்திற்கு கொடுக்கப்பட்டிருக்கிற உத்தரவாதத்தை பாருங்கள். நம் வாழ்க்கையில் சிறிய காரியத்தையும் எந்த அளவுக்கு உண்மையாக நிறைவேற்றுகிறோம் என்பதையே தேவன் பார்க்கிறார்.  

இது எதை வெளிப்படுத்துகிறது என்றால் மனிதனுடைய இருதய நிலையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. கொஞ்சமானாலும் சரி, அதிகமானாலும் சரி, இருதயத்தில் செவ்வையானவனாக இருந்தால், நிச்சயமாக பொறுப்புள்ள மனிதனாக செயல்படுகிறவனாக காணப்படுவான். 

ஒருவேளை இன்றைய வாழ்க்கையில் ஆண்டவர் மிகச்சிறிய ஒரு பொறுப்பை நம்முடைய வாழ்க்கையில் கொடுத்திருப்பாரானால், அதை உண்மையாய் நிறைவேற்ற வேண்டும். அந்த காரியத்தில் நம்மை ஆசீர்வதித்து, பெரிய காரியத்தை நமக்குக் கொடுப்பார். அதேவிதமாக நம் ஊழியத்திலும் ஆண்டவர் கொடுத்திருக்கிற சிறிய பொறுப்பையும், சிறிய ஆவிக்குரிய உத்தரவாதத்தையும், இது சிறியது என்று எண்ணி நீங்கள் அலட்சியப்படுத்தாமல், இதை ஆண்டவருக்கென்று நாம் செய்கிறோம் என்ற இருதயத்தோடு நாம் செய்ய வேண்டும். அப்பொழுது ஆண்டவர் நம்மை பிற்காலத்தில் பெரிய காரியத்திற்கு பொறுப்பாளியாக நியமிப்பார்.  

ஆண்டவர் நம்முடைய வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் எந்த வேலையிலும் நாம் எவ்விதமாக செயல்பாடுகிறோம் என்பதை முதலாவது ஒரு சிரு வேலை மூலம் சோதித்தறிந்து, பிறகு பெரிய காரியத்திற்காக நம்மைத்  தெரிந்து கொள்ளுகிறார். ஆமென். 





  :   23 Likes

  :   108 Views