ஊழியத்தைக்குறித்து நான்கு காரியங்களைப் பார்க்கிறோம். அவை என்ன? 1. கிறிஸ்துவின் ஊழியக்காரராக ஊழியஞ்செய்யுங்கள். 2. மனப்பூர்வமாய் ஊழியஞ்செய்யுங்கள். 3. தேவனுடைய சித்தத்தின்படி ஊழியஞ்செய்யுங்கள். 4. நல் மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். ஊழியத்தில் முழுமையான ஈடுபாடு தேவை, அரை குறையாய் அல்ல. கர்த்தருடைய ஊழியத்தை அவர் வார்த்தை சொல்லுகிறபடி செய்யவேண்டும். அப்பொழுது கர்த்தர் ஊழியத்தைக் கனப்படுத்துவார்.
கர்த்தருடைய ஊழியம்
எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனபூர்வமாய்ச் செய்யுங்கள்” (கொலோ 3 : 24)
ஊழியத்தைக்குறித்து நான்கு காரியங்களைப் பார்க்கிறோம். அவை என்ன? 1. கிறிஸ்துவின் ஊழியக்காரராக ஊழியஞ்செய்யுங்கள். 2. மனப்பூர்வமாய் ஊழியஞ்செய்யுங்கள். 3. தேவனுடைய சித்தத்தின்படி ஊழியஞ்செய்யுங்கள். 4. நல் மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். ஊழியத்தில் முழுமையான ஈடுபாடு தேவை, அரை குறையாய் அல்ல. கர்த்தருடைய ஊழியத்தை அவர் வார்த்தை சொல்லுகிறபடி செய்யவேண்டும். அப்பொழுது கர்த்தர் ஊழியத்தைக் கனப்படுத்துவார்.
இந்த வசனம் கர்த்தருக்கென்று மனப்பூர்வமாய் ஊழியம் செய்ய நம்மை அழைக்கிறது. எதை செய்தாலும் தேவனுக்கென்று செய்யுங்கள் ஒருவேளை நீங்கள் செய்கிற காரியம் மனிதர்களால் விளங்கிக் கொள்ள முடியாமல் இருக்கலாம். அது அவசியமும் இல்லை. தேவன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார் அதற்கான பலன் கிடைக்கும். மனிதர்களை பிரியப்படுத்தும்படி அதிகமாய் செய்தாலும் அவர்கள் உதாசினப்படுத்திவிடலாம், தேவன் அப்படியல்ல. தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே (எபி 6 : 10)
தேவனுக்கென்று ஊழியம் செய்வதைக் குறித்து மனுஷருக்குப் பிரியமாயிருக்க விரும்புகிறவர்களாகப் பார்வைக்கு ஊழியஞ் செய்யாமல், கிறிஸ்துவின் ஊழியக்காராக, மனப்பூர்வமாய்த் தேவனுடைய சித்தத்தின்படி செய்யுங்கள் (எபேசியர் 6 : 6) மனுஷருக்கென்று ஊழியஞ்செய்யாமல், கர்த்தருக்கென்றே நல்மனதோடே ஊழியஞ்செய்யுங்கள். (எபே 6 : 8). மனுஷருக்குப் பிரியமாய் இருக்க விரும்பி பார்வைக்கு ஊழியம் செய்கிறவர்கள் கடைசியில் ஏமாந்து போய்விடுவார்கள். தேவனுக்கு ஊழியம் செய்கிறவர்கள் என்றென்றும் போற்றப்படுவார்கள். ஆமென்.
Write a public review