எது உங்கள் பெலன்? நெகேமியா 8:10 "கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பதே உங்களுடைய பெலன்."
மகிழ்ச்சி. ஒரு உணர்வாக இது இருக்கின்றது. இது வல்லமையானதொரு ஆவிக்குரிய சக்தியாக இருக்கின்றது. ஆவிக்குரிய ஜீவியத்தில், மகிழ்ச்சி என்பது இன்றியமையாததாய் இருக்கிறது. கர்த்தருக்குள் பெலப்படாமல், விசுவாச வாழ்க்கை வாழ முடியாது. மகிழ்ச்சியாய் வாழும்படி பயிற்றுவிப்பதன் மூலமே, கர்த்தர் நம்மை பெலப்படுத்துகிறார்!
மகிழ்ச்சி என்பது மனதின் நிலை அல்ல. அது துரிதமாய் வந்து மறையக்கூடிய உணர்ச்சியும் அல்ல. மெய்யாகவே, மகிழ்ச்சி என்பது ஒரு சக்தியாக இருக்கின்றது.மகிழ்ச்சிக்கு எதிராக பிசாசு எதையும் கொண்டு வந்து நிறுத்த முடியாது. விசுவாசத்திற்கு முன், பயம் நிற்க முடியாது என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மையாய், மகிழ்ச்சிக்கு முன், விரக்தி நிற்க முடியாது என்பதும் இருக்கின்றது.
பரிசுத்த ஆவியானவரின் கனிகளில் ஒன்றாக, சந்தோஷம் இருக்கின்றது. இந்தக் கனி ஏற்கனவே நமக்குள் இருக்கின்றது. நாம் இதை வளர்த்துக் கொள்ள வேண்டும். இன்று நாம் எப்பேர்ப்பட்ட சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும், அவற்றின் மத்தியிலும், நீங்கள் மகிழ்ச்சி நிறைந்தவர்களாய் வாழ முடியும்.கர்த்தருக்குள் பெலப்பட்ட நிலையில் நாம் வாழ முடியும். நமக்குள் இருந்து பரிசுத்த ஆவியானவர் தருகிற பெலத்தைப் பெற்று, வெற்றி வாழ்க்கை வாழ முடியும்.எனவே கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருங்கள். ஆமென்.
Write a public review