இடறிபோகாத வாழ்க்கை
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



இடறிபோகாத வாழ்க்கை

2 பேதுரு, 1: 10.  ஆகையால், சகோதரரே, உங்கள் அழைப்பையும் தெரிந்துகொள்ளுதலையும் உறுதியாக்கும்படி ஜாக்கிரதையாயிருங்கள்; இவைகளைச் செய்தால் நீங்கள் ஒருக்காலும் இடறிவிழுவதில்லை. 

உலகத்தின் அஸ்திபாரத்திற்கு முன்பு.விசுவாசத்தினால் அனைவரையும் தேவன் தேர்ந்தெடுக்கிறார் .. இயேசு கிறிஸ்துவினால் நமக்கு கிடைக்கும் இலவச இரட்சிப்பின் பரிசை நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதில் தமது அழைப்பும், தெரிந்து கொள்ளப்படுவதும் இருக்கிறது. தேவன் நம்மை கிறிஸ்துவில் ஏற்றுக்கொள்கிறார்; நாம் அவரிடத்தில் நிலைநிறுத்தப்படுகிறோம்; ஆவியினால் கிறிஸ்துவின் நாளுக்கு, நாம் முத்திரை போடப்பட்டிருக்கிறோம். 

நம்முடைய அழைப்பும் , தெரிந்து கொள்ளுதலும் அடங்கிய நம்முடைய இரட்சிப்பு நம் இருதயத்தில் உறுதியாக நிலை பெற்றுள்ளது என்பதில் உறுதியாக இருக்கும்படி பேதுரு கேட்டுக்கொள்கிறார். ஏனென்றால், நம்முடைய அழைப்பும் , தெரிந்து கொள்ளுதலும் கிறிஸ்துவில் பாதுகாப்பானது ஆகும்.  பரிசுத்தமாக வாழ்க்கையை வாழ்வதன் மூலம் அதை நம் வாழ்வில் உறுதிப்படுத்துகிறோம்; 

இதனால் அவர் விரும்பியபடி நம் வாழ்க்கையை வாழ்வோம். அவருடைய புகழுக்கும் மகிமைக்கும் பலனைத் தருவோம். சத்திய வார்த்தையில் வேரூன்றிய தேவன் விரும்புகிற வாழ்க்கை நாம் வாழ்வோம். கிறிஸ்துவில் நாம் பாதுகாப்பாக இருப்போம். நாம் எந்த காரியத்திலும் இடறி விழ மாட்டோம். ஆமென். 





  :   24 Likes

  :   70 Views