ஆவியில் எளிமை
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



ஆவியில் எளிமை

மத்தேயு 5:3. ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.  

இயேசு கிறிஸ்து மலைப் பிரசங்கத்தின் போது சொன்ன  போதனை. பெருமை மற்றும் மாயையால் நிரப்பப்படுவதைக் காட்டிலும், நம்மைத் தாழ்த்தி, நம்மைப் போலவே நம்மை நினைப்பதில் உண்மையான இன்பம் இருக்கிறது. ஆவியில் எளிமை என்பது மனிதன் இருதயத்தின் எண்ணத்திலும், சிந்தையிலும் எளிமையாக இருந்து கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து, எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பது.  

சாந்த குணமுடையவர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் அமைதியைக் காத்து, மற்றவர்களுக்கு மென்மையான பதிலைக் கொடுத்து, பொறுமையுடன் காரியங்களை நிறைவேற்றி, போட்டி பொறாமை இல்லாமல், கர்த்தர் தனக்கு வைத்திருக்கிற திட்டத்தை அறிந்து , அவர் கொடுக்கிற பெலதில் நடந்து தங்கள் ஆத்துமாவை காத்துக் கொள்கிறார்கள். 

 சாந்தகுணம் கூட செல்வம், ஆறுதல் மற்றும் பாதுகாப்பை ஊக்குவிக்கிறது. ஆவியில் எளிமையுள்ளவர்கள் மெய்யான ஒளியைத் தரித்து இயேசு கிறிஸ்துவை உலகத்துக்கு பிரதிபலிக்கிறார்கள். அதே நேரத்தில்  பரலோகராஜ்யத்தில் சேர தகுதி அடைகிறார்கள். கர்த்தர் விரும்புகிறபடி நம்முடைய ஆவியில் எளிமையாக இருப்போம். ஆமென். 

 





  :   19 Likes

  :   76 Views