அநியாயமா நீதியா! அசுத்தமா பரிசுத்தமா!
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



அநியாயமா நீதியா! அசுத்தமா பரிசுத்தமா!

"அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயம் செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும்."  (வெளிப்படுத்தல் 22 : 11) 

இன்றைக்கு அநேகர் உள்ளத்தில் எழும்படியான கேள்வி என்னவென்றால், நான் தேவனுக்கென்று வாழவிரும்புகிறேன். ஆனால் எனக்கோ அநேக துன்பங்கள், கஷ்டங்கள், பாடுகள்; தேவனை அறியாத எத்தனையோ பேர் என் கண் முன்பாக செழிப்பாய் இருக்கிறார்கள். அநியாயஞ்செய்கிறவன் கொழுத்திருக்கிறான் என்று எண்ணுகின்றனர். 

தேவ மனிதனாகிய ஆசாப் கூட, சங்கீத புத்தகத்தில் தேவனை அறியாத மக்களின் வாழ்வைக் குறித்து இவ்விதம் எழுதுகிறார். அதெனில், "துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள்மேல் பொறாமைகொண்டேன். மரணபரியந்தம் அவர்களுக்கு இடுக்கண்களில்லை; அவர்களுடைய பெலன் உறுதியாயிருக்கிறது. நரர் படும் வருத்தத்தில் அகப்படார்கள்; மனுஷர் அடையும் உபாதியை அடையார்கள்."  (சங்கீதம் 73 : 3 ,4 , 5)  

அதேவேளையில், தேவன் நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும் பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாயிருக்கட்டும் என்றும் தேவன் தம்முடைய மக்களைப் பார்த்து சொல்லுகிறார். இவ்விரண்டு மக்களின் முடிவைக் குறித்து நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும். தேவனை அறியாத மனிதனின் முடிவு அழிவு, நித்திய அக்கினி, நித்திய வேதனை. ஆனால் நீதிமானின் முடிவு சமாதானம், நித்திய வாழ்வு, சந்தோஷம். 

நம் பார்வை உலகத்தின் மேல் இல்லாமல், நித்திய வாழ்வின் மேல் இருக்க கர்த்தர் உதவி செய்வாராக . ஆமென். 





  :   10 Likes

  :   53 Views