ஸ்தோத்திர பலி
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 26-Sep-2024



ஸ்தோத்திர பலி

நாம் எப்பொழுதும் தேவனை துதிக்க வேண்டும். இன்று துதிக்கிறேன் என்று சொல்லி  ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் என்று அநேக முறை சொல்லிகொண்டே இருப்பார்கள். அவர்களின் உதடுகள் அல்லது வாய் அவ்விதம் சொல்லிகொண்டிருக்கும் ஆனால் இருதயமோ வேறு எதையாகிலும் சிந்தித்துக் கொண்டிருக்கும். இது தேவனுக்கு ஏற்கும்படியான துதி அல்ல. 

ஸ்தோத்திர பலி  சங்கீதம் 147:1.  "கர்த்தரைத் துதியுங்கள்; நம்முடைய தேவனைக் கீர்த்தனம்பண்ணுகிறது நல்லது, துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது." 

நாம் எப்பொழுதும் தேவனை துதிக்க வேண்டும். இன்று துதிக்கிறேன் என்று சொல்லி ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம், ஸ்தோத்திரம் என்று அநேக முறை சொல்லிகொண்டே இருப்பார்கள். அவர்களின் உதடுகள் அல்லது வாய் அவ்விதம் சொல்லிகொண்டிருக்கும் ஆனால் இருதயமோ வேறு எதையாகிலும் சிந்தித்துக் கொண்டிருக்கும். இது தேவனுக்கு ஏற்கும்படியான துதி அல்ல.  

வெளிப்படுத்தின விசேஷம் 4ம் அதிகாரத்தில் தேவ சிங்காசனத்திற்கு முன்பாக நான்கு ஜீவன்களைப் பார்க்கிறோம். அவைகள் தேவனுக்கு மகிமையையும், கனத்தையும் ஸ்தோத்திரத்தையும் செலுத்துகின்றன.  (வெளி 4 : 9)  என்று பார்க்கிறோம். ஆனால் அவைகள் எவ்விதம் சொல்லி ஸ்தோத்திரத்தை செலுத்துகின்றன என்று பாருங்கள். இருந்தவரும் இருக்கிறவரும் வருகிறவருமாகிய சர்வவல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரிசுத்தர், பரிசுத்தர் பரிசுத்தர் என்று இரவும் பகலும் ஓய்வில்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன  (வெளி 4 : 8)  

இதில் நாம் பார்க்கிறதென்ன? விளங்குதலோடும் அர்த்தத்தோடும் துதி ஏறெடுக்கப்படுகிறது. தேவனுடைய சர்வவல்லமை, பரிசுத்தம் ஆகிய தேவனின் பண்புகளை நினைவு கூர்ந்து ஸ்தோத்திரம் ஏறெடுக்கப்படுகிறது. இதுதான் சரியான துதி செலுத்தும் முறையாகும். தேவனுடைய பண்புகளை வேதத்தில் எந்த அளவு ஒரு மனிதன் அறிந்திருக்கிறானோ அந்த அளவுக்கு அவன் அவருக்கு அர்த்தமுள்ள ஸ்தோத்திர பலிகளை ஏறெடுக்கிறவனாய் இருப்பான். ஸ்தோத்திர பலியிடுகிறவன் என்னை மகிமைப்படுத்துகிறான்.அது தேவனுக்கு பிரியமாயிருக்கும். ஆமென்.





  :   17 Likes

  :   66 Views