விதையை மையமாக வைத்து மிக பெரிய பொருளாதாரம் உள்ளது. நம் இந்தியாவில் இது காலம் காலமாக விதைக்கு முக்கியதுவம் கொடுத்திருக்கிறார்கள் நெல் எடுத்து கொண்டால் பலவிதமான நெல் வகைகள் உண்டு. அதே போல் திராட்சை, பப்பாளி போன்ற நம் அன்றாட வாழ்வில் சாப்பிடுகிற உணவு பொருட்களில் cross breeding என்ற தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி விதையில்லாத கனிகளை உருவாக்கின்றார்கள். ஆனால் ஆண்டவர் படைத்தது விதையுள்ள கனி மரங்களை செடி வகைகளையும் படைடுத்தார்.
விதை
விதையை மையமாக வைத்து மிக பெரிய பொருளாதாரம் உள்ளது. நம் இந்தியாவில் இது காலம் காலமாக விதைக்கு முக்கியதுவம் கொடுத்திருக்கிறார்கள் நெல் எடுத்து கொண்டால் பலவிதமான நெல் வகைகள் உண்டு. அதே போல் திராட்சை, பப்பாளி போன்ற நம் அன்றாட வாழ்வில் சாப்பிடுகிற உணவு பொருட்களில் cross breeding என்ற தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி விதையில்லாத கனிகளை உருவாக்கின்றார்கள். ஆனால் ஆண்டவர் படைத்தது விதையுள்ள கனி மரங்களை செடி வகைகளையும் படைடுத்தார்.
ஆதியாகமம் 1 : 29 பின்னும் தேவன் : இதோ, பூமியின் மேல் எங்கும் விதைதரும் சகலவிதப் பூண்டுகளையும் விதைதரும் கனிமரங்களாகிய சகலவித விருட்சங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகள் உங்களுக்கு ஆகாரமாயிருக்கக்கடவது.
ஒரு கனியை நாம் சாப்பிடுகிறதுமல்ல அந்த விதை மூலம் ஒரு கனி கொடுக்கிற மரத்தை உருவாக்க முடியும். ஆனால் இன்று தொழிற்நுட்பம் என்கிற பெயரில் தேவனுடைய படைப்புக்கு விரோதமாக விதையில்லாத கனிகள் உருவாக்கப்படுகிறது.
வேதம் விதையை ஒரு செழிப்புக்கு உதாரணமாக காட்டுகிறது.
சங் 72 : 16 பூமியிலே மலைகளின் உச்சிகளில் ஒரு பிடி தானியம் விதைக்கப்பட்டிருக்கும்; அதின் விளைவு லீபனோனைப்போல அசையும்; பூமியின் புல்லைப்போல நகரத்தார் செழித்தோங்குவார்கள்.
ஒரு பிடி விதை கையில் இருந்தால், வாழ்க்கை மாறும், செழிப்பு உண்டாகிறது மரம், செடிகளின் விதை ஒரு ஆசீர்வாதமாக மனிதனுக்கு உள்ளது.
விதை தேவன் நமக்கு கொடுத்த சொத்து. பூமியின் உயிரினங்களுக்கு மனிதன், விலங்குகள், எல்லாவற்றிற்கும் மரம், செடி உணவாக காணப்படுகிறது. நமது முன்னோர்கள் இந்த விதைக்கு மதிப்பு கொடுத்திருக்கிறார்கள்.
கோபுர கலசங்களில் நல்ல விதைகளை சேமித்து வைத்தார்கள், நாட்டில் பஞ்சம் ஏற்பட்டால் அந்த விதைகளை எடுத்து பயிரிட்டிருக்கிறார்கள்.
ஆனால் இன்று விதையில்லா மரம், செடிகள் உருவாக்கப்படுகிறது.
விதையில்லா கனியில் உருவாகும் தீமைகள்
(i) தற்காப்பு தன்மை மாறுகிறது
முன்னோர்கள் ஒருவருக்கொருவர் கனி மரங்களின் விதைகளை பகிர்ந்து கொண்டு பயிரிட்டார்கள். ஆனால் இன்று கனிகளின் விதைக்காக ஒரு பெரிய நிறுவனங்களை சார்ந்து இருக்கிற நிலைமை மாறுகிறது.
(ii) உடலுக்கு தீமை
இந்த விதையில்லா கனிகளை உட்கொள்வதின் மூலம் மனித உடலுக்கும் ஆபத்து ஏற்படுகிறது. ஒரு பப்பாளியின் எடை 1 கிலோதான் வரும் என்றால், cross breeding செய்வதன் மூலம் அது 3 அல்லது 4 கிலோ எடை வரலாம். அதை மனிதன் சாப்பிடும் போது மனிதனும் 3 அல்லது 4 மடங்கு எடை அதிகமாக வாய்ப்பு உள்ளது. இது உடல் நலத்திற்கு கேடு உண்டாக்கும்.
(iii) கடவுள் நம்பிக்கை மாறுகிறது.
ஒரு காலத்தில் விதைகளை வைத்து ஜெபம் செய்து பயிரிடுவார்கள். ஆனால் இன்று விதைக்காமல் செயற்கை செடிகளை வாங்கி நடுவதால் கடவுள் நம்பிக்கையும் மெதுவாக மாறுகிறது. r
(iv) திடீர் மாற்றம்
பத்து கனிகள் கொடுக்கின்ற மரங்களில் இந்த செயற்கை உற்பத்தியின் மூலம் 100 கனிகள் கொடுக்க முடியும், இந்த திடீர் மாற்றம் மனிதனுக்கு கேடு உண்டாக்கும். ஆண்டவரின் படைப்பு என்றும் மாறாதது.
ஆதாம் காலத்தில் ஒரு மரம் 100 கனிகளை கொடுத்தால் இன்றும் அதே மரம் 100 கனிகள் தான் கொடுக்கும். கால சூழ்நிலைகளை பொறுத்து சிறிய மாற்றம் தான் இருக்கும். கர்த்தர் என்றும் மாறாதவர், அவருடைய படைப்பும் மாறாதது.
( V) பலுகி பெருகுவது
தேவனுடைய படைப்பு எல்லாம் ஒன்றிலிருந்து ஒன்று பலுகி பெருக கூடியது. இந்த விதையில்லா கனியால் தேவசித்தம் மனிதனால் மறுக்கப்படுகிறது.
இது ஒரு அறிவியல் வளர்ச்சியாக இருந்தாலும் தேவனுடைய படைப்புக்கு விரோதமானது. எல்லா அறிவியல் வளர்ச்சிகளையும் கண்மூடி தனமாக ஏற்று கொள்ள முடியாது. தேவன் ஆதி 29: 1 விதையை மேற்கொள் காட்டி சொல்லிருக்கிறார்.
படைப்பு தேவனுடையது, விதைகளை பேணி காப்போம், விதையுள்ள கனி மரங்களை உருவாக்குவோம். கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படிவோம். ஆமென்.
Write a public review