ஆதியாகமம் 6:9 . நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.
எல்லோரும் போல தானும் இருக்க வேண்டுமென்று நோவா எண்ணியிருந்தால் அவன் விசுவாச வீரனாக வந்திருக்க முடியாது. தவிர்க்க முடியாத சூழ்நிலையை நான் மட்டும் எப்படி தவிர்க்க முடியும்? என யோசேப்பு எண்ணியிருந்தால் நாட்டின் உயர் பதவிக்கு வந்து இருக்க முடியாது. நாட்டின் ராஜாவாலே முடியவில்லை நான் எப்படி முடியும் என்று ஆடு மேய்க்கும் இளைஞன் தாவீது எண்ணியிருந்தால் கோலியாத்தை வென்றிருக்க முடியாது.
வேத வசனம் சொல்லாத ஒரு விஷயத்தில், ஆயிரம் பேர் சென்றாலும் நாம் அதில் போகாது இருக்க வேண்டும். அதேநேரத்தில் வேதம் ஒரு விஷயத்தை சரி என்று சொல்லும்பொழுது ஒருவரும் நம்மோடு இல்லாவிட்டாலும் நாம் (நோவா போல) அதை செய்திட உறுதியாக இருக்க வேண்டும்.
வித்தியாசமாக இருப்போம் . வேதம் நமக்கு கொடுக்கிற விவேகமான விஷயத்தில் வித்தியாசமாக இருந்து ஜெயிக்க விரும்புகிறவர்களுக்கு கர்த்தர் என்றும் துணையாய் இருப்பார். ஆமென்.
Write a public review