வேதம் சொல்லும் மழை!
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



வேதம் சொல்லும் மழை!

பூமியிலுள்ள மனுஷர் , மிருகங்கள் ஆகியவற்றின் தாகத்தை தீர்ப்பதற்காக வானத்திலிருந்து இறங்கி வரும் தண்ணீர் மழை ஆகும்.

இது தாவர வகைகளின் வளர்ச்சிக்கும் அவசியமானது .

தேவன் மாத்திரமே மழையின் மீது அதிகாரமுள்ளவர் . புறஜாதி தெய்வங்களுக்கு மழையின்மீது அதிகாரமில்லை .

மோசே ( யாத் 9 : 33-34 ) சாமுவேல் { 1 சாமு 12.17-18 ) ஆகியோர் மழையின்மீது தேவனுடைய அதிகாரத்தை முன்னறிவித்திருக்கிறார்கள் .

எலியாவின் ஜெபத்திலும் இந்த சத்தியம் உறுதிபண்ணப்பட்டிருக்கிறது ( 1 இராஜா 18 : 42-45 ) .

ஜலப்பிரளயத்தை பற்றி தேவனுடைய அறிவிப்பிலும் இந்த சத்தியம் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது ( ஆதி 7 : 4 , 10-12 ) .

தேவன் ஏற்றவேளையில் மழையை அனுப்புவார் ( லேவி 26 : 4 ; உபா 11.14 ) . இந்த வாக்குத்தத்தம் எல்லா தேசங்களுக்கும் உரியது ( மத் 5:45 ; அப் 1417 ) 

மழை என்பது இஸ்ரவேல் தேசத்தாருக்கு தேவனுடைய ஆசீர்வாதத்தின் அடையாளமாகும் ( உபா 28.12 ) .

இஸ்ரவேல் தேசத்தாரை எச்சரிக்கும்போதும் ( ஆமோ 4 : 6-7 ) . தமது நியாயத்தீர்ப்பை அறிவிக்கும்போதும் ( 1 இராஜா 17 : 1 ; எரே 3 : 3 ) தேவன் மழையை நிறுத்திவிடுகிறார் .

ஆதி 2 : 5 - ஆவது வசனத்தில்  தேவனாகிய கர்த்தர் பூமியின்மேல் இன்னும் மழையைப் பெய்யப்பண்ணவில்லை  என்று கூறப்பட்டிருக்கிறது . நோவாவின் காலத்தில் ஜலப்பிரளயத்திற்கு முன்பாக பூமியில் மழையே பெய்யவில்லையென்று இந்த வாக்கியத்திற்குப் பொருள்கூறக்கூடாது .

தாவரங்களும் , மனுஷரும் சிருஷ்டிக்கப்பட்ட அந்தச் சிருஷ்டிப்பின் காலத்தில் அதுவரையிலும் பூமியின்மேல் மழை பெய்யவில்லை . அதன் பின்பு மழை பெய்திருக்கிறது .

லூசிபரின் காலத்தில் பூமியின்மேல் மழை பெய்ததாக யோபு 38 : 4-9 , 25-30 ; சங் 135 : 7 ; சங் 147 : 8 ; நீதி 8 : 27-29 ; ஏசா 14 : 12-14 ; எரே 10 : 12-13 ஆகிய வசனங்களை மேற்கோளாகக் கூறி ஒருசிலர் வியாக்கியானம் கூறுகிறார்கள் .

சிருஷ்டிப்பின் இந்தக் காலத்திலிருந்து நோவாவின் காலம் வரைக்கும் இடையிலுள்ள சுமார் 1,656 வருஷங்களில் பூமியின்மேல் மழை பெய்திருக்க வேண்டும்.

பிழை அகற்ற மழை கிடைக்கும்! ஆமென்!

தண்ணீர்களில் நடந்த அற்புதங்கள்.

பரிசுத்த வேதத்தில் தண்ணீர்களில் மிக அதிகமாக அற்புதங்கள் நடந்துள்ளன அவைகளின் தொகுப்பு.

1. தண்ணீர்களின் சிருஷ்டிப்பு. (யோபு 38:8-30)

2. பர்வதங்களின்மேல் தண்ணீர் நின்றது (ஆதி.2; சங் 104:5-6; 2 பேதுரு 3:5-7)

3. தண்ணீரைப் பிரித்தல் (ஆதி 1.5-10; சங் 104:7-9)

4. நோவாவின் ஜலப்பிரளயம் (ஆதி 6-8)

5. ஆகாருக்கு வனாந்தரத்தில் தேவன் தண்ணீர் அளித்தார். (ஆதி 21:14-21)

6. தண்ணீர் இரத்தமாக மாறுதல் (யாத் 7:17-25)

7. தண்ணீர்கள்மேல், ஆரோன் கையை நீட்டி தவளைகளை வரச்செய்தான்.(யாத் 8.1-5)

8. தவளைகள், தண்ணீர்களில் மட்டும் இருக்கும்படிச் செய்தல் (யாத் 8.5-11)

9. சிவந்த சமுத்திரம் உறைந்துபோதல் (யாத் 14:21-15:8)

10. சிவந்த சமுத்திரம் உருகி ஓடியது (யாத் 14:26-31)

11. தண்ணீரை மதுரமாக மாற்றுதல் (யாத் 15:23-26)

12. கன்மலையிலிருந்து தண்ணீர் வரப்பண்ணுதல் (யாத் 17:1-6)

13. மறுபடியும் கன்மலையிலிருந்து தண்ணீர் வரப்பண்ணுதல் (எண் 20.7-11)

14. யோர்தானைக் கடக்க, தண்ணீரைக் குவியலாகச் செய்து, உலர்ந்த தரையாக மாற்றுதல் (யோசு 3)

15. சிம்சோனுக்கு, பள்ளத்தைப் பிளக்கப் பண்ணி தண்ணீரை வரவழைத்துக் கொடுத்தல் (நியா 15:19)

16. கர்த்தரிடத்திலிருந்து வந்த அக்கினி வாய்க்காலிலிருந்த தண்ணீரை நக்கிப்போட்டது (1இராஜா18:38)

17. எலியா, தன் சால்வையினால் தண்ணீரை அடித்து, அதை இரண்டாகப் பிரித்து, உலர்ந்த தரையாக மாற்றுதல்  (2இராஜா 2.8)

18. எலிசா, எலியாவின் சால்வையினால், தண்ணீரைப் பிரித்து, உலர்ந்த தரையாக மாற்றுதல் (2 இராஜா 2:14)

19. தண்ணீரை உப்புப் போட்டு ஆரோக்கிய மாக்குதல் (2 இராஜா 2:19-22)

20. யோசபாத்திற்குப் பள்ளத்தாக்கிலே தண்ணீர் அளித்தல் (2 இராஜா 3.16-20)

இரத்தம்போல் சிவப்பாகக் காணுதல்

21. மேவாபியர்கள், தண்ணீரை (2இராஜா 3:21-27)

22.யோர்தான் நதியின் தண்ணீரால் நாகமான் குணமாதல். (2 இராஜா 5.31-19)

23. இரும்புக் கோடாரியைத் தண்ணீரில் மிதக்கப்பண்ணுதல். (2இராஜா 6:1-7)

24. பிசாசுகள் நுழைந்த பன்றிக் கூட்டங்கள் கடலிலே பாய்ந்து ஜலத்தில் மாண்டுபோதல். (மத் 8:32)

25. இயேசு கடலின்மேல் நடந்து வருதல். (மத் 14:22-33)

26. கடலிலிருந்து பிடித்த மீனின் வாயிலிருந்து வெள்ளிப்பணத்தை எடுத்தல். (மத் 17:24-27 ) 

27. காற்றை நிற்கப் பண்ணி அமைதல் உண்டாக்குதல். (மாற்கு 4:35-41)

28. வலை கிழிந்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தல். (லூக்கா 5.1-11)

29. தண்ணீரைத் திராட்சரசமாக மாற்றுதல். (யோவான் 21-11)

30.பெதஸ்தா குளத்து தண்ணீரினால் வியாதியஸ்தர்கள் குணமாக்கப்படுதல். (யோவான் 5:1-4)

31. படவு  உடனடியாகக் கரையைச் சேருதல். (யோவான் 6:21)

32. மறுபடியும் திரளான மீன்கள் அகப்படுதல். (யோவான் 21:3-11)

33. சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாக மாறுதல். (வெளி 8:8-9)

34. தண்ணீரில் மூன்றிலொருபங்கு எட்டியைப்போலக் கசப்பாக மாறுதல். (வெளி 8.10-11)

35. சமுத்திரம் முழுவதும் இரத்தமாக மாறுதல். (வெளி 16:3)

36. ஆறுகள் இரத்தமாக மாறுதல். (வெளி 16:4-7)

37. ஐபிராத் நதி வற்றிப்போதல். (வெளி 16:12)

38. ஆயிர வருஷ நதியின் சிருஷ்டிப்பு {எசே 47)தியானத்துக்குப் பயன்படுத்துங்கள.




  :   18 Likes

  :   65 Views