"உமது வேதத்திலுள்ள அதிசயங்களை நான் பார்க்கும்படிக்கு, என் கண்களைத் திரந்தருளும்." (சங்கீதம் 119 : 18)
வேதத்தின் சத்தியங்களை, எந்த மனிதன் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும்? அது கடலைக் காட்டிலும் மிகவும் விஸ்தாரமானது. ஆனாலும் அதே தேவனுடைய வார்த்தை மட்டுமே ஒரு மனிதனுக்கு வெளிச்சம் தர முடியும்.
எத்தனையோ பேர் தேவனுடைய சத்திய வேத புத்தகத்தை வைத்திருக்கிறார்கள். ஆனாலும் வேதத்திலுள்ள தேவனுடைய மேலான சத்தியத்தை அறிய வேண்டுமென்று வாஞ்சையற்றவர்களாகவே வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்கள் வாழ்க்கையில் அடையும் இழப்பு எவ்வளவு பெரியதென்று அறியாதிருக்கிறார்கள். தேவனுடைய வார்த்தை உங்களுக்கு மறைபொருளாயிருக்கிறதா? அப்படியானால் இந்த தாவீதை போல ஜெபியுங்கள். தேவனுடைய சத்தியத்தின் அறிவில் வளர்வது நமக்கு மனமகிழ்சியைக் கொடுக்கும். (சங் 119 : 92 ) மெய்யான மகிழ்ச்சியை தேவனுடைய வார்த்தையின் மூலம் நாம் பெறுவது மாத்திரமல்ல, அது நம் வாழ்க்கையின் துக்க வேளைகளையும் வெற்றியோடே கடந்துச்செல்ல உதவும்.
தேவ ஆவியானவர் தம்முடைய வார்த்தைகளை நமக்கு விளக்கிக்காட்டும் பொழுது தான் கர்த்தருடைய வார்த்தையை நாம் முழுமையாக விளங்கிக்கொள்ள முடியும். தினமும் நாம் வேதத்தை வாசிக்கும் பொழுது , நமது வேதத்திலுள்ள அதிசயங்களை நாம் பார்க்கும் படிக்கு, நம் கண்களைத் திரந்தருள வேண்டும் என்று ஜெபிப்போம். தேவன் அவ்விதம் செய்வார். ஆமென்.
Write a public review