வெட்டுக்கிளிகள் - எட்டாவது வாதை! (GRASSHOPPER , BEETLE)
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



வெட்டுக்கிளிகள் - எட்டாவது வாதை! (GRASSHOPPER , BEETLE)

வெட்டுக்கிளிகள் பறக்கக்கூடியவை . தரையிலே இவை தத்திப்போகாது ( லேவி 11:21 ) . 

 வெட்டுக்கிளிகள் - எட்டாவது வாதை! (GRASSHOPPER , BEETLE) வெட்டுக்கிளிகள் பறக்கக்கூடியவை . தரையிலே இவை தத்திப்போகாது ( லேவி 11:21 ) .

 வெட்டுக்கிளிகளில் Cricketer என்றொரு இனம் உள்ளது . இவை தத்தும் , பறக்கும் . 

 மொழிபெயர்ப்பாளர்கள் வெட்டுக்கிளிகளை katydid , locusts என்றும் மொழி பெயர்த்திருக்கிறார்கள் . 

 வேதாகமத்தில் பல இடங்களில் வெட்டுக்கிளிகளைப் பற்றிய குறிப்புகள் உள்ளன . 

 பூர்வகாலத்தில் பாலஸ்தீன தேசம் போன்ற வறட்சியான தரைப்பகுதியில் வெட்டுக்கிளிகள் இருந்தன .

 வேதாகமத்தில் கூறப்பட்டிருக்கும் வெட்டுக்கிளிகளில் ஏராளமாக பிரத்தியட்சமானவை ( யாத் 10 : 4-19 ) , மற்றவை அடையாளமாகக் கூறப்பட்டுள்ளவை { எண் 13:33 ). 

 வெட்டுக்கிளிகளைக் குறிப்பிடுவதற்கு ஆங்கிலத்தில் grasshopper , locust ஆகிய இரண்டு வார்த்தைகளும் பயன்படுத்தப் பட்டுள்ளன . இவ்விரண்டுமே ஒரே பொருளைக் கொடுக்கக்கூடியவை . 

 இவ்விரண்டு சொற்கள் தவிர , katydid என்னும் வார்த்தையும் வெட்டுக்கிளியைக் குறிப்பிடுகிறது ( லேவி 11:22 ) . வெட்டுக்கிளிகள் மிகவும் ஆபத்தானவை . அவை அதிகளவில் இனப்பெருக்கம் செய்து , எல்லாவிதமான பயிர்வகைகளையும் ஒரே நாளில் தின்றுவிடும் . காட்டையே அழித்துவிடும் . 

 கர்த்தர் எகிப்தியர்மீது எட்டாவது வாதையாக வெட்டுக்கிளிகளை அனுப்பினார் . கோடிக்கணக்கான வெட்டுக்கிளிகள் எகிப்து தேசத்தின்மீது பறந்துவந்தன . 

 வெட்டுக்கிளிகள் மிகவும் விரைவாக உண்ணும் பழக்கமுடையவை . ஒரு தோட்டத்திற்குள் வெட்டுக்கிளிகள் வந்துவிட்டால் , அவற்றின் மூலமாக வரும் அழிவை நிறுத்துவது சிரமம் . 

 வெட்டுக்கிளிகள் தண்ணீரில் மூழ்கிவிட்டாலும் , மற்ற வெட்டுக்கிளிகள் செத்துப்போன வெட்டுக்கிளிகளைப் பாலம்போல பாவித்து அவற்றின்மீது கடந்து செல்லும் . 

 தற்காலத்திலும் , வெட்டுக்கிளிகளினால் விவசாயிகளுக்கு ஏராளமான பிரச்சனைகள் வருகின்றன . வெட்டுக்கிளிகளை விஷமருந்து தெளித்து அழிப்பதைவிட அவற்றின் முட்டைகளை அழித்துப்போட்டால் , இனம்பெருக்கத்தைத் தடுக்க முடியும் . 

 வெளிப்படுத்தின விசேஷத்தில் வெட்டுக்கிளிகளைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது . ஐந்தாம் தூதன் எக்காளம் ஊதினான். அப்பொழுது; வானத்திலிருந்து பூமியின்மேல் விழுந்த ஒரு நட்சத்திரத்தைக் கண்டேன் ; அவனுக்குப் பாதாளக்குழியின் திறவுகோல் கொடுக்கப்பட்டது . அவன் பாதாளக்குழியைத் திறந்தான் ; உடனே பெருஞ்சூளையின் புகையைப்போல அந்தக் குழியிலிருந்து புகை எழும்பிற்று ; அந்தக் குழியின் புகையினால் சூரியனும் ஆகாயமும் அந்தகாரப்பட்டது . அந்தப் புகையிலிருந்து வெட்டுக்கிளிகள் புறப்பட்டுப் பூமியின்மேல் வந்தது ; அவைகளுக்குப் பூமியிலுள்ள தேள்களின் வல்லமைக்கொப்பான வல்லமை கொடுக்கப்பட்டது . பூமியின் புல்லையும் பசுமையான எந்தப் பூண்டையும் எந்த மரத்தையும் சேதப்படுத்தாமல் , தங்கள் நெற்றிகளில் தேவனுடைய முத்திரையைத் தரித்திராத மனுஷரைமாத்திரம் சேதப்படுத்த அவைகளுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டது  ( வெளி 9.1-4 ) ,

வெட்டுக்கிளிகள் தண்ணீருள்ள  இடகளில்தான் வாழும் என்று கூறமுடியாது . உஷ்ணமான தரையிலும் அவை வாழக்கூடியவை . பாலஸ்தீன தேசத்தில் கோடைகாலத்திலும் ஏராளமான வெட்டுக்கிளிகள் காணப்படுகின்றன . 

 வெட்டுக்கிளிகளுக்கு உணவுபற்றாக்குறை ஏற்படும்போது , பெண்வெட்டுக்கிளிகளின் உடம்பில் ஒருசில மாற்றங்கள் உண்டாகும் . அவற்றின் முட்டைகளெல்லாம் அக்காலத்தில் குஞ்சு பொரிக்கும் . இதனால் ஏராளமான வெட்டுக்கிளிகள் உற்பத்தியாகி , அவை எல்லா இடங்களுக்கும் பறந்து சென்று , பஞ்சகாலத்தில் தங்களுக்குத் தேவையான உணவு வகைகளைச் சேகரிக்கும் . 

 யூதர்கள் வெட்டுக்கிளிகளை உணவாகப் புசித்தார்கள் ( லேவி 11:22 ) . அவற்றை வறுத்தும் , காயவைத்தும் , அவித்தும் புசித்தார்கள் . 

 யோவான்ஸ்நானன் வனாந்தரத்தில் இருந்தபோது வெட்டுக்கிளிகளைப் புசித்தார் ( மத் 3 : 4 ) . 

 வெட்டுக்கிளிகள் சீக்கிரமாக இனவிருத்தி செய்யக்கூடியவை. . 

 வேதாகமத்தில் வெட்டுக் கிளிகள் சேனைகளுக்கு ஒப்பாகக் கூறப்பட்டிருக்கிறது . ( நியா 6 : 5 ; நியா 7.12 ; சங் 105 : 34 ; எரே 46:23 ; எரே 51:14 ; யோவே 1 : 4 ; நாகூம் 3.15 ) .

 வெட்டுக்கிளிகளினால் தாவர வகைகளுக்கு காட்டுத்தீயை விட அதிக சேதம் உண்டாகும் . 

 காட்டுத்தீயைவிட வெட்டுக்கிளிகள் பயிர் வகைகளை விரைவில் அழித்துப்போடும் .

 சங் 78:46 ஆவது வசனத்தில் இந்த வாதையைப் பற்றி இவ்வாறு விளக்கப்பட்டிருக்கிறது .  அவர்களுடைய விளைச்சலைப் புழுக்களுக்கும் , அவர்களுடைய பிரயாசத்தின் பலனை வெட்டுக்கிளிகளுக்கும் கொடுத்தார்  . 

 ஆதாமின் காலத்திலிருந்து இப்படிப்பட்ட அழிவு வெட்டுக்கிளிகளினால் இதுவரையும் ஏற்பட்டதில்லை . இது இயற்கையான அழிவல்ல . தேவனுடைய நியாயத்தீர்ப்பினால் உண்டான வாதை . 





  :   20 Likes

  :   73 Views