விசுவாசத்தில் நம்மை பயிற்றுவிக்கிறார்
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



விசுவாசத்தில் நம்மை பயிற்றுவிக்கிறார்

விசுவாசத்தில் நம்மை பயிற்றுவிக்கிறார் (எபிரெயா; 11:1)

 விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது.

  உண்மையில் தேவன் தன்னை மறைத்துக் கொள்வதில்லை சதா காலமும் நமது எல்லா அனுபவங்களும் அவர் இருக்கிறார். யோசேப்பு இதை கண்டுகொண்டான். ஆதியாகமம் 39:40,41 இல் யோசேப்பு பல இடங்களில் பல்வேறு சூழ்நிலைகளில் இதை பார்க்கிறோம். போத்திபாரு அரண்மனையிலும், சிறைச்சாலைகளிலும் , பார்வோனின் அரண்மனையில் தேவன் அவனோடு இருந்தார். ஆனால் யோசேப்பு அவரை காணவில்லை . வாழ்க்கையில் சோதனைகள் , துன்பத்திலும் ஆழமான விசுவாசத்தினால் தான் அவரை கண்டு கொள்ள முடியும் நாம் காணாத போதும் தேவன் அங்குதான் இருக்கிறார் . மேகங்களால் சூரியன் மறக்கப்பட்டா லும் சூரியன் அங்கே தான் இருக்கும் . அது போல சோதனைகளும் துன்பங்களும் தேவனுடைய பிரசன்னத்தை நம்மிடமிருந்து மறைக்கலாம் ஆனால் தேவன் நம்மை விட்டு விடவில்லை விசுவாசத்தில் இந்த உண்மையை உணர்ந்து அதில் உறுதியாக இருப்போம் ஆமென்.

 




  :   24 Likes

  :   68 Views