"நல்ல கருத்துகளால் கவரப்பட்டுகின்றனர் சிலர். நல்ல போதனைகளால் தொட படுகின்றனர் சிலர் . ஆனால் அவற்றால் ஏற்பட வேண்டிய நல்ல மாற்றங்கள் அவர்களிடம் இல்லை .அவர்கள் நல்லதை அடையாளம் கண்டுகொண்டார்கள். ஆனால் அந்த நல்லதைக் கொண்டு தங்களை நல்லவர் ஆக்கிக் கொள்ள முன்வரவில்லை".
மாற்றத்திற்கு சாட்சி
1 யோவான் 2:4. "அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை."
நல்ல கருத்துகளால் கவரப்பட்டுகின்றனர் சிலர். நல்ல போதனைகளால் தொட படுகின்றனர் சிலர் . ஆனால் அவற்றால் ஏற்பட வேண்டிய நல்ல மாற்றங்கள் அவர்களிடம் இல்லை .அவர்கள் நல்லதை அடையாளம் கண்டுகொண்டார்கள். ஆனால் அந்த நல்லதைக் கொண்டு தங்களை நல்லவர் ஆக்கிக் கொள்ள முன்வரவில்லை.
இயேசுவின் போதனைகள் ஈடுஇணையற்ற வை. இதனை பலர் அறிய வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம் ஆனால் இந்த போதனைகளால் நமக்கு ஏற்பட்ட உயர்ந்த மாற்றங்களை அனுபவமாக காண்பிக்க இயலாவிட்டால் என்ன பிரயோஜனம்? இயேசுவினால் வரும் இரட்சிப்பை எல்லோரும் பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம் ஆனால் இயேசுவினால் வருகின்ற இரட்சிப்பின் அனுபவம் நம்மை எந்த அளவுக்கு சிறந்த மனிதர்களாக மாற்றியுள்ளது என்பதை நாம் சாட்சியாக காண்பிக்க விட்டால் என்ன பிரயோஜனம்.?
இயேசுவை அநேகர் ஏற்றுக் கொள்ளாததற்கு காரணம் சுவிசேஷம் அறிவிக்கப்படாதது காரணமல்ல, இயேசுவை ஏற்றுக் கொண்டவர்கள் அதற்கேற்ற விதமாய் உயர்ந்த வாழ்வை காட்டாதே காரணம். இதை உணர்ந்து கிறிஸ்துவை அறிந்து நாம் கிறிஸ்துவை பிரதிபலிப்போம். ஆமென்.
Write a public review