தீத்து, 2:7." நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து, நாம் நல்லவர்களாகவும் , தேவனுக்கு பிரியமானவர்களாகவும், மற்றவர்களுக்கு மாதிரியாக வாழும்போது, நம்மை போல எல்லோரும் அப்படி மாறி விடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஆனாலும் நாம் எல்லாவற்றிலும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.
சிலர் மற்றவருடைய நல்ல வாழ்க்கையும், முன்மாதிரியான வாழ்க்கையும் பார்த்து அந்த வேறுபாட்டை அறிகிறார்கள் . ஆனாலும் அவர்களுக்குள் ஒரு மாற்றத்தை கொண்டு வர முடியவில்லை.
ஒருவன் தன்னை கர்த்தருக்கு அர்ப்பணித்தால் மட்டுமே அவருடைய பாவ இயற்கை நீங்கி பரிசுத்தமாக வாழ வாய்ப்பு ஏற்படும்.
எல்லோரும் கர்த்தருக்கு தங்களை அர்ப்பணித்து , கர்த்தருக்குள் நிலைத்து வாழ வேண்டும் என்ற ஆசை இருக்க வேண்டும், அப்படி இல்லாமல் போனாலும் நாம் சோர்ந்து போகக்கூடாது . நாம் அவர்களுக்கு ஒரு நல்ல மாதிரியாக இருப்பது அவசியமானது . கர்த்தர் ஒரு நல்ல மாற்றத்தை அவர்களுக்கு கொடுப்பதற்கு நாம் அவர்களுக்காக ஜெபம் பண்ணுவது நமது கடமையாகும். ஆமென்.
Write a public review