சங்கீதம், 127: 4. "இதோ, பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம், கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன்."
கர்த்தருடைய கரம் ஒரு மனிதனை உருவாக்கும் பொழுது ஒரு நோக்கத்திற்காக படைக்கிறார். அவருடைய நோக்கம் என்ன? தேவ பக்தியுள்ள ஜனங்களை உருவாக்குவது (மல்கியா 2:15)
பிள்ளைகள் கர்த்தருடைய கிருபையினால் கொடுக்கப்படுகிறது. ஆகையால் ஆண் குழந்தை பெண் குழந்தை என்ற வேறுபாடு இல்லாமல், அவர்களை ஒரு பாரமாக பார்க்காமல், அவர்கள் கர்த்தரால் கொடுக்கப்பட்ட ஈவுகள் என்று கர்த்தருக்கு ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்த வேண்டும். அவர்களுக்கு பெற்றோர்கள் முன்மாதிரியாக வாழ்ந்து ஏற்ற காலத்திலேயே அவர்களை இரட்சிப்புக்குள் நடத்த பிரயாசைப் பட வேண்டும்.
ஒருவேளை பிள்ளைகளின் வாழ்வில் ஒரு குறைவு இருந்தாலும் கர்த்தர் அதை மாற்ற வல்லவராக இருக்கிறார். மத்தேயு 15:22-28 ல் கானானிய ஸ்திரீ தன் மகளுக்காக விசுவாசத்துடன் இயேசு கிறிஸ்துவை கேட்ட பொழுது அவளுடைய மகள் பிசாசின் பிடியில் இருந்து விடுதலை பெற்றாள் . பிள்ளைகளுக்காக அதிகமாக ஜெபித்து தேவ வசனத்தை போதித்து, கர்த்தருக்குள் நாம் நடத்தும் பொழுது, பிள்ளைகளின் சமாதானம் நமக்கு மிகுதியாக இருக்கும்.
கர்த்தர் கொடுத்த சுதந்திரமாகிய பிள்ளைகள் வாழ்வில் அலட்சியமாக இல்லாமல், தேவ நோக்கத்தை (தேவ பக்தியுள்ள சந்ததி) நிறைவேற்ற முயற்சிப்போம். கர்த்தருக்குள்ளான பிள்ளைகள் பெற்றோருக்கு மிகுந்த ஆசீர்வாதமாக இருக்கிறார்கள். ஆமென்.
Write a public review