2 தீமோதேயு 3:14. "அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் "
பொதுவாக பிள்ளைகள் பிறந்த நாள் முதற்கொண்டு பெற்றோர்களை பின்பற்ற துவங்குகிறார்கள். பெற்றோரின் பேச்சு நடை உடை பாவனை எல்லாவற்றையும் பார்த்து உள்வாங்கி அவைகளை திரும்பவும் இந்த உலகத்துக்கு கொடுக்கிறார்கள்.
"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது." தமிழ் பழமொழி களில் ஒன்றான இப்பழமொழி, தெளிவாக நமக்குச் சொல்லுகிறது என்னவென்றால் சிறுவயதில் நாம் விதைக்கும் விதைகள் பிள்ளைகளின் மனதில் ஆழமாகப் பதியும். பெற்றோர்களாக நாம் சிறு பிள்ளைகளுக்கு தேவையான தெய்வீக விதைகளை அவ்வப்போது தினமும் தூவிக் கொண்டே வரவேண்டும்.
அதற்கும் முதலாவது பெற்றோருக்கு தெய்வீக ஞானம், தேவ வசனம், தேவக் கிருபை அவசியம். இதன் மூலம் பிள்ளைகளுக்கு தேவையான தெய்வீக ஊட்டச்சத்தை தினந்தோறும் கொடுக்க வேண்டும்.
பிள்ளைகள் பெற்றோரை எடுத்துக்காட்டாக வைத்திருப்பதினால் பெற்றோர் அதற்கேற்றவாறு தங்களை சுத்திகரித்துக் கொண்டு வேதவசனங்கள் அதிகமாக தெரிந்துகொண்டு பிள்ளைகளுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். பெற்றோரின் தவறுகளையும் பிள்ளைகள் பார்த்துக் கொண்டு அதையும் அவர்கள் உட்கொள்கிறார்கள் என்பதை நினைவில் கொண்டு கவனத்துடனும் தேவ பயத்துடனும் பிள்ளைகளை நாம் வளர்க்க வேண்டும். இது பெற்றோர்களின் மேல் உள்ள பெரும் பொறுப்பு.
Write a public review