பெற்றோரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
 /   Blog /  Created by Kingslin R Last updated Mon, 24-Feb-2025



பெற்றோரிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சிம்சோன் உடைய வாழ்வின் வீழ்ச்சிக்கு காரணம் தெலீலாள் இல்லை. சிம்சோன் தன் தாய் தந்தையிடம் வெளியில் நடந்த காரியத்தை சொல்லவில்லை அதன் காரணமாகவே அந்த வீழ்ச்சி ஏற்பட்டது. நியாயாதிபதிகள் 14:6-9 இல் சிம்சோன் சிங்கத்தை கொன்று சில நாட்கள் கழித்து அந்த பகுதியில் வரும் பொழுது சிங்கத்தின் உடலுக்குள் தேன்கூடு இருந்தது. அந்த தேனை எடுத்து சாப்பிட்டு தன் தாய் தந்தையருக்கு கொடுத்தான். ஆனால் அவர்களிடம் அவன் உண்மையை கூறவில்லை.

சிம்சோன் நசரேய விரதம் இருக்கிறவர் அவர் பிணத்தின் அருகே போகக்கூடாது. (எண்ணாகமம் 6:6) 

ஆனால் சிங்கத்தின் பிணத்தின் அருகில் சென்று உள்ளிருந்த தேனையும் எடுத்து சாப்பிட்டார் அது குற்றமாகும். அதை அவர் தனது தாய் தந்தையிடம் சொல்லி இருந்தால் அவர்கள் கூறியிருப்பார்கள் நீ சாப்பிடக்கூடாது நசரையே விரதம் இருக்கிறாய். அப்படி நடந்து கொண்டால் அவர்கள் மொட்டை அடிக்கப்பட வேண்டும். ஆசாரிகளிடம் காண்பித்து மறுபடியும் முடி வளர்ந்த பிறகு மறுபடியும் அவர்கள் இந்த விரதத்தை தொடரலாம்.

அவன் தன் தாய் தந்தையிடம் சொல்லாமல் தன்னுடைய குற்றத்திற்கு பரிகாரம் தேடாமல் இருந்ததினால், கடைசியில் என்ன நடந்தது? அவன் பெரிஸ்தியர் அரண்மனையில் கண்கள் குருடாக்கப்பட்டு அவனுடைய முடியை அவன் இழந்ததையும் தன்னுடைய வாழ்க்கையை தொலைத்ததையும் நாம் அறிவோம்.

தன்னுடைய தாய் தந்தையிடம் கூறியிருந்தால் இந்த நிலைமைக்கு ஆளாக்கப்பட்டிருக்க மாட்டார். வாலிபர்களே இன்று உங்களில் ஏதோ ஒரு பிரச்சனை இருந்தால் உங்கள் தாய் தந்தையிடம் கூறுங்கள். அவர்கள் அதற்கு என்ன செய்யலாம் என்று சரியான ஆலோசனை கூறுவார்கள். நீங்கள் அதை மறுபடியும் அந்த குறைவிலிருந்து எழும்பி வாழ முடியும். அப்படி இல்லை என்றால் ஒரு நாள் பொல்லாத மனிதர்கள் உங்கள் வாழ்க்கையை அழித்து விடுவார்கள் கவனமாக இருங்கள். இதற்கு சிம்சோனின் வாழ்க்கை சிம்சோனின் வீழ்ச்சி ஒரு எடுத்துக்காட்டு.




  :   9 Likes

  :   23 Views