1. இனி ஒருபோதும் தோல்வி பற்றி பேச மாட்டேன். ஏனெனில் "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப் பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" (1 கொரி.2:14).
2. இனி ஒருபோதும் "எனக்கு ஞானமில்லை" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "கிறிஸ்து இயேசுவே தேவனால் எனக்கு ஞானமானார்" (1 கொரி 1:31).
3. இனி ஒருபோதும் வியாதியைக் குறித்து அவிசுவாசமாக பேச மாட்டேன். ஏனெனில் "அவருடைய தழும்புகளால் நான் சுகமானேன்" (ஏசாயா 53:5).
4. இனி ஒருபோதும் நான் கவலைகளையோ, விரக்தியையோ அறிக்கையிட மாட்டேன். ஏனெனில் "அவர் என்னை விசாரிக்கிறவரானபடியால், என் கவலைகளையெல்லாம் அவர் மேல் வைத்து விடுகிறேன்" (1 பேதுரு 5:7).
5. இனி ஒருபோதும் "எதையும் விடவே முடியவில்லை" என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் "கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையும் உண்டு"(2கொரி 3:17)
6. இனி ஒருபோதும் ஆக்கினைத் தீர்ப்பு பற்றி பயப்பட மாட்டேன். ஏனெனில் "கிறிஸ்து இயேசுவுக்கு உட்பட்டவர்களாய் இருந்து, மாம்சத்தின் படி நடவாமல் ஆவியின்படியே நடக்கிறவர்களுக்கு ஆக்கினைத் தீர்ப்பில்லை" (ரோமர் 8:1)'
Write a public review