நீதி
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



நீதி

மத்தேயு, 5:10. "நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது."  

நம்முடைய தேவன் நீதிபரர். அவர் நீதியில் பிரியப்படுகிறார். இயேசுவின் இரத்தத்தால் நீதிமான்களாக்கப்பட்ட நாமும் நீதியுள்ளவர்களாய் வாழ  நம்மை அர்ப்பனிக்க வேண்டும். வேதபாரகர் பரிசேயர் நீதியிலும் உங்கள் நீதி அதிகமாயிராவிட்டால் பரலோக ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கமாட்டீர்கள் என்று வேதம் நம்மை எச்சரிக்கிறது.  

இந்த உலகத்தில் நீதியும் நியாயமும் இல்லை. நான் மட்டும் எப்படி நீதியாய் வாழ முடியும் என எண்ணலாம். நோவா வாழ்ந்த காலமும் பொல்லாதது தான் ஆனாலும் அவர் நீதிமான் என வேதம் சாட்சி பகருகிறது.  சில சூழ்நிலைகளில் நாம் நீதியாய் செயல்படும் போது துன்பம் அனுபவிக்க கூடும். ஆனாலும் நாம் தேவ நீதியை நிறைவேற்றுவதில் பசிதாகமுள்ளவர்களாய் இருக்க  வேண்டும். 

அநேக சூழ்நிலைகளில் நாம் நம்முடைய சுயநீதியை காண்பித்து  பெருமைப்படுவோம். நாம் தேவனுக்கு முன்பாக நீதியாய் வாழும் போது  ,பாவத்தினின்றும்  குற்ற மனசாட்சியிலிருந்தும்  விடுதலை பெறுகிறோம். வேதம் கூறுகிறது "...நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும்..." [வெளி:22:11].  தேவநீதியை நிறைவேற்றுவதே நம்முடைய  ஆவிக்குரிய பசியாயிருக்கட்டும்; அதற்காய் துன்பத்தையும் அனுபவிப்போம் தேவ ராஜ்ஜியத்தின் சுதந்தரமாய் மாறுவோம். ஆமென். 





  :   24 Likes

  :   67 Views