"நீடிய பொறுமை", "நீடிய-பொறுமை", "நீடிய பொறுமை".
 /   Blog /  Created by Kingslin R Last updated Tue, 01-Oct-2024



"நீடிய பொறுமை", "நீடிய-பொறுமை", "நீடிய பொறுமை".

நீடிய பொறுமை ஆவியின் கனியில் ஒரு பங்காகும்

ஆவியின் கனியோ அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்.  (கலாத்தியர் 5:22)

 நீடிய பொறுமை என்பது இரக்கம் அல்லது பொறுத்துக்கொள்ளுதல் என்று இந்த வார்த்தைக்கு பொருள் கூறலாம்.

 மனுஷன் தன்னுடைய பாவத்தினால் தண்டனைக்கு பாத்திரவானாக இருக்கிறான். தேவன் தம்முடைய நீடிய பொறுமையினால் மனுஷனை உடனே தண்டித்து விடாமல் அவன் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பை கொடுக்கிறார்  (ரோம 2:4).

மனுஷன் பாவியாகவும், துன்மார்க்கனாகவும் இருக்கின்றபோதிலும் தேவன் அவனோடு பொறுமையோடிருந்து கிரியை நடப்பித்து வருகிறார்  (யாத் 34.6).மனுஷர் மனந்திருந்த வேண்டுமென்பதே தேவனுடைய நீடியபொறுமையின் நோக்கமாகும்  (ரோம 2:4, 2பேது 3.9,15).

தேவபிள்ளைகள் நாம் பரலோக பிதாவைப்போல நீடிய பொறுமையுள்ளவர்களாக இருக்கவேண்டும்  (1கொரி 13:4-5).தேவன் நம்மீது பொறுமையோடிருக்கிறார்(எபே 4:31-32),பழிவாங்குதல் கர்த்தருக்கே உரியது  (ரோம 12:19).

 சில நேரங்களில் நீடிய பொறுமை என்பது நீடிய பாடுகளை அனுபவித்தல், தெய்வீக காரியங்களில் சோதிக்கப்படும் பொழுது பொறுமையோடு உறுதியாக தரித்திருத்தல் ஆகிய பொருளும் உண்டு.

 அதாவது பரிசுத்த ஆவியானவர் ஒரு நபருக்குள் பொறுமையின் கனியை வளப் படுத்தும்பொழுது, அவர் தனது நம்பிக்கையை இழந்து போகாமல், கர்த்தருடைய சமூகத்தில் காத்திருப்பார். தனது தோல்விகளை ஒத்துக்கொள்வார். தான் தோல்வி அடைந்ததாக எண்ணமாட்டார். உணர்வுகளை கோபம் ஆளுகை செய்ய அனுமதிக்க மாட்டார். இந்தப் பண்பை உடையவர் சோதிக்கப்படும் பொழுது, நீடிய பொறுமையோடு தன்னைக் காத்துக்கொள்வார். எதற்கும் அவசரப்படமாட்டார். யாரையும் அவசரப்பட்டு குறை கூறவோ, கடிந்து கொள்ளவோ, தண்டிக்கவோ மாட்டார். அதேவேளையில் மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும், வேதனையுடைய சோதனை காலத்திலும் இவர் வீழ்ந்து போகவும் மாட்டார்.

 நீடிய பொறுமை நமக்குள் அதிகம் அதிகமாய் வளரும்பொழுது நாம் கிறிஸ்துவின் சாயலுக்கு ஒப்பாக வளர்ச்சி பெறுகிறோம். கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து நீடிய பொறுமையோடு இருப்போம் ஆமென்.

 




  :   24 Likes

  :   99 Views