நீதிமொழிகள் 3:5-6 - "உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து,உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்."
ஒரு காரியத்தை செய்ய வேண்டும் என்றால் நமக்கு அநேக நேரங்களிலே அனேக சந்தேகங்கள் வரும் இப்படி செய்யலாமா அல்லது அப்படி செய்யலாமா என்ற கேள்வியோடு இருப்பது மனிதர்களின் வழக்கம். அநேக பேர் தங்கள் மன விருப்பத்தின்படி செய்து அதில் தோல்வி அடைவதும் உண்டு.
வேதம் சொல்கிறது, உன் சுய புத்தியின் மேல் சாயாமல், கர்த்தரில் நம்பிக்கையாய் இருந்து அவரை நினைத்து ஒவ்வொன்றும் செய்கிற பொழுது, நாம் பாதைகளை அவர் செவ்வைப்படுத்துவார் என்று வேதம் சொல்கிறது.
இன்றைக்கு அநேகர் தங்கள் வாழ்க்கையை வாழ்வதற்கு கடினம், ஏன் இந்த வாழ்க்கை வாழ்கிறேன் என்று புலம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கர்த்தரை நம்பிக்கையாக கொண்டு நடக்கிற மனிதனுக்கு இந்த புலம்பல் தேவையில்லை அவரில் நாம் நம்பிக்கையாக இருக்கும் பொழுது நாம் செல்கிற பாதை சரியான பாதை வெற்றி உள்ள பாதை.
Write a public review