யாக்கோபு 1:2-4 - “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது,உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்.
நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரண கிரியை செய்யக்கடவது."
எப்படி இந்த சவால்களை நாம் எதிர்கொள்வது?
சோதனைகளின் நோக்கத்தைப் புரிந்துகொள்வது
துன்பத்தின் மூலம் நெகிழ்ச்சியை வளர்த்தல்
கடினமான காலங்களில் கர்த்தரின் திட்டத்தை நம்புதல்
ஆதரவையும் ஊக்கத்தையும் தேடுதல்
சவால்கள் மூலம் நம்பிக்கையில் வலுவாக வளர்தல்
எனக்குத் தெரிந்த ஒரு வாலிபர் தன்னுடைய வாலிப நாட்களிலே வியாதியினால் மிகவும் கஷ்டப்பட்டு, ஏன் மரித்து விடுவோம் என்ற எண்ணமும் அவருக்கு உண்டாகியிருந்தது . ஆனாலும் அவர் சிறு வயதிலிருந்து கிறிஸ்தவ குடும்பத்தில் வளர்ந்ததினால் அந்த சூழலிலும் அவருக்கு அந்த சோதனையான நேரத்தில் அவருக்கு இயேசு கிறிஸ்துவின் மீது ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. இந்த சூழலில் என் வாழ்க்கையில் ஜெயம் கொடுக்க இயேசு கிறிஸ்துவால் முடியும் என்ற ஒரு நம்பிக்கையிலே , ஒரு நாள் ஒரு சிறிய ஜெபம் செய்தார். ஆண்டவர் எல்லா கட்டிகளிலிருந்தும், நோய்களிலிருந்தும் அவரை விடுவித்து இன்று ஒரு ஊழியக்காரராக அவர் இருந்து கொண்டிருக்கிறார்.
இன்று நீங்கள் வியாதியிலோ, கஷ்டத்திலயோ புலம்பிக் கொண்டிருந்தால், பொறுமையாக இருந்து கிறிஸ்துவின் மேல் நம்பிக்கை வைத்து அவருக்குள் அர்ப்பணித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக விடுதலை உண்டு.
Write a public review