எரேமியா 17:7 "கர்த்தர்மேல் நம்பிக்கைவைத்து, கர்த்தரைத் தன் நம்பிக்கையாகக் கொண்டிருக்கிற மனுஷன் பாக்கியவான்."
நான் கல்விக்கூடத்தில் படிக்கும் பொழுது எனக்கு தன்னம்பிக்கை பற்றி சொல்லிக் கொடுத்தார்கள். அடுத்து நான் வேலையில் சேர்ந்த பொழுது எனக்கு தன்னம்பிக்கை பற்றி பயிற்சி கொடுத்தார்கள். ஒரு நாள் நான் வேதத்தில் இந்த வசனத்தை படித்த பொழுது நேர் எதிர்மாறாக இருந்தது.உலகம் *தன்னம்பிக்கை* பற்றி பேசுகிறது. வேதம் கர்த்தரை *தன் நம்பிக்கையாக* கொண்ட மனிதன் பாக்கியவான் என்று சொல்கிறது.
தன்னம்பிக்கை ஒரு மனிதனுக்கு சில செயல்களில் வெற்றி கொடுக்கலாம், ஆனால் சமாதானத்தையும் , தாழ்மையையும், பரிபூரண ஆசீர்வாதத்தையும் கொடுக்காது.
கர்த்தரை தன் நம்பிக்கையாக கொண்ட மனிதன் , கோடை காலத்திலும் செழிப்பாக இருக்கிற மரத்தைப் போலவும், மழையில்லாத காலங்களிலும் கனி கொடுக்கும் மரத்தைப் போலவும், செழிப்பாக இருப்பார்கள்.
இயேசு கிறிஸ்துவை அறிந்த நாம், என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பெலனுண்டு என்ற நம்பிக்கையை வளர்த்து, கிறிஸ்துவுக்குள் நாம் வெற்றி பெற்றவர்களாக வாழ்வோம். ஆமென்.
Write a public review