1 கொரிந்தியர் 15:33 - "மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்"
இன்று ஒரு கிறிஸ்தவ வாலிபனின் செயல் எப்படி இருக்க வேண்டும்?
நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் வேத ஞானம்
விசுவாசத்தில் உறுதியாக நிற்பது
எதிர்மறை தாக்கங்களை எதிர்ப்பது
கிறிஸ்துவின் மூலம் சக உறவுகளை வலுப்படுத்துதல்
தவறு என்று தெரிந்தும் சில நேரங்களில் நண்பர்களின் வற்புறுத்தலுக்காக நீங்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகள் உண்டு. வாலிப வயதில் இந்த சூழ்நிலையை எல்லோரும் பொதுவாக கடந்து இருப்பார்கள். அந்த மாதிரி சூழ்நிலையில் நீங்கள் தைரியமாக வேத அறிவை பயன்படுத்தி அதன்படி நீங்கள் நிற்கும் பொழுது நிச்சயமாக அந்த அழுத்தத்தில் இருந்து உங்களுக்கு விடுதலை கிடைக்கும். அந்த வேத ஆலோசனையை நீங்கள் மற்றவர்களுக்கு நல்ல சூழ்நிலையில் எடுத்துக் கூறுகிற பொழுது, அவர்களும் அதை பின்பற்ற வாய்ப்புண்டு கர்த்தர் அதை நிச்சயமாக உதவி செய்வார்.
பவுல் இது மென்மையாகவும் அன்பாகவும் எச்சரிக்கையாகவும் எடுத்துக் கூறுகிறார். எப்படி என்றால் மோசம் போகாதீர்கள் என்று. ஆம் நண்பன் தானே அவன் சந்தோஷத்திற்காக நாம் அவனோடு அந்த தவறுகளில் இருக்கலாம் என்று எண்ணுகிற பொழுது நம்முடைய வாழ்க்கை மோசமாகிவிடும். எனவே எச்சரிக்கையாக இருங்கள் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியுங்கள்.
சங்கீதத்திலேயே சொல்லப்பட்டது போல பரிகாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காரமலும் என்ற வசனத்தின் படி நாம் சில பொல்லாதவர்களின் இடங்களை தவிர்ப்பது நல்லது. இப்படி கர்த்தருடைய வார்த்தையை நாம் நினைவு கூர்ந்து இப்படிப்பட்ட சூழல்களை நாம் எதிர்த்து வெளிவரும்பொழுது கர்த்தர் நிச்சயமாக உங்களை ஆசீர்வதிப்பார். மேன்மையான ஒரு வாழ்க்கை தருவார். ஆமென்.
Write a public review