1 சாமுவேல் 15:23. "இரண்டகம்பண்ணுதல் பில்லிசூனிய பாவத்திற்கும், முரட்டாட்டம்பண்ணுதல் அவபக்திக்கும் விக்கிரகாராதனைக்கும் சரியாய் இருக்கிறது; நீர் கர்த்தருடைய வார்த்தையைப் புறக்கணித்தபடியினாலே, அவர் உம்மை ராஜாவாயிராதபடிக்குப் புறக்கணித்துத் தள்ளினார் என்றான்."
இந்த வசனத்தில் மூன்று காரியங்கள் சொல்லப்பட்டிருக்கிறது.
1) இரண்டகம்பண்ணுதல் (கலகம்)
இன்று சபைகளிலும், வீடுகளிலும், வேலை செய்யும் இடங்களிலும் கலகம் செய்கிற கிறிஸ்தவர்கள் அனேகம் உண்டு. இப்படிப்பட்ட செயல்களை பில்லிசூனிய பாவத்திற்கு வேதம் ஒப்பிடுகிறது. நம்மால் ஒரு பிரச்சனை சபைகளில் அல்லது பணியிடங்களில் வராமல் நாம் சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும்.
2) முரட்டாட்டம்பண்ணுதல்
இப்படிப்பட்ட செயல்கள் சாதாரணமாக இன்று பார்க்கப் படுகிறது. ஆனால் வேதமோ முரட்டாட்டம் பண்ணுகிற செயல் விக்கிரக ஆராதனைக்கு ஒப்பிடப்படுகிறது.
3) கர்த்தருடைய வார்த்தையை புறக்கணித்தல்
சவுல் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்படியாததால், அவன் ராஜா பதவியிலிருந்து கர்த்தரால் புறக்கணிக்கப்பட்டார்.ஒருவன் கர்த்தருடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல் இருந்தால் , கர்த்தர் அவனை புறக்கணிக்கிறார் என்பதை உணர வேண்டும்.
இது வேதத்தில் சவுலுக்கு கொடுக்கப்பட்ட எச்சரிப்பு . இதை நாமும் உணர்ந்து இப்படிப்பட்ட காரியங்கள் நம்மில் இருக்குமானால் அதிலிருந்து கர்த்தருடைய கிருபையினால் விடுதலை பெற வேண்டும். கர்த்தருக்கு பிரியம் உள்ள ஒரு வாழ்க்கை வாழ்வோம். ஆமென்.
Write a public review