தேவனுடைய ராஜ்யம்!
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 03-Oct-2024



தேவனுடைய ராஜ்யம்!

"நான் தேவனுடைய விரலினாலே பிசாசுகளைத் துரத்துகிறபடியால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்தில் வந்திருக்கிறதே"  (லூக். 11:20).  

சீஷர்களில் பலருக்கு தேவனுடைய ராஜ்யத்தைப் பார்த்துவிட வேண்டும் என்ற ஓர் ஆசை இருந்தது. சிலருக்கு அந்த ராஜ்யத்திலே பெரியவனாயிருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. ஆனால், இயேசு கிறிஸ்துவோ \"தேவனுடைய ராஜ்யம் உங்களுக்குள் இருக்கிறதே" என்றார்.  

நீங்கள் நித்தியமான மோட்ச ராஜ்யத்திற்குள் செல்லுவதற்கு முன்பாக அந்த ராஜ்யம் உங்களுக்குள் ஸ்தாபிக்கப்பட வேண்டியது அவசியம்.   அநேகம் பேர்  அவரை "ஆண்டவரே" என்று அழைக்கிறார்கள். ஆனால், ஆண்டவர் அவர்களை ஆளுவதற்கு விட்டுக்கொடாமல் சுயசித்தத்தின்படி நடக்கிறார்கள்.   நீங்கள் அவரை முழு இருதயத்தோடு அழைக்கும்போது, அவர் வந்து உங்களுக்குள்ளே வாசம் பண்ணுவார். அதன் மூலம் பரலோக ராஜ்யம் முதலில் உங்களுக்குள் ஆரம்பிக்கப்பட்டு, ஸ்தாபிக்கப்படுகிறது.  

பரலோகராஜ்யம் உங்களுக்குள்ளே வரவேண்டுமென்றால் முதலாவதாக, உங்களுக்குள்ளே இருக்கிற அந்தகாரலோகாதிபதியின் ஆட்சி நீங்கியாகவேண்டும். தேவனுடைய சுவிஷேத்தின் ஒளி உங்கள் உள்ளத்தைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும்.  

ஆண்டவரே, நீர் என் உள்ளத்தில் வாரும்’ என்று நீங்கள்  அழைக்கும்போது, அவர் நிச்சயமாகவே உங்களுக்குள் வருவார். இயேசு கிறிஸ்து உங்கள் வாழ்க்கையில் வரும்போது, அவர் முதலில் செய்கிற காரியம், தன்னுடைய விரலினாலே பிசாசுகளை துரத்தி, தேவனுடைய ராஜ்யத்தை உங்களுக்குள் ஸ்தாபிப்பதே. ஆமென். 





  :   20 Likes

  :   66 Views