தேவனுடைய ஆலயம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 03-Oct-2024



தேவனுடைய ஆலயம்

1 கொரிந்தியர் 3:17.  "ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்." 

தேவன் நம்மை  அவருடைய  சபைக்கு ஒப்பிட்டு பேசுகிறார். சபையில் பரிசுத்தவான்கள் ஒன்றுகூடி தேவனை ஆராதிக்கிறார்கள். சபையில் பலிபீடம் என்று இருக்கும். அங்கே அபிஷேகம் பண்ண பட்டவர்கள் மட்டும் தான் செல்ல வேண்டும் என்று ஒரு சட்டமே இருக்கிறது. 

தேவன் கையினால் செய்யப்பட்ட ஆலயத்தை விட நம் இருதயங்களில் வாசம் செய்ய விரும்புகிறார். சரீரம் ஆலயம் என்றால் இருதயம் தான் பலிபீடம். அங்கு பரிசுத்த ஆவியானவருக்கு நாம் எப்பொழுதும் துதிபலியை எடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்.  

என்னுடைய சரீரம் தானே , இது என்னுடைய தனிப்பட்ட காரியம் என்று சொல்லி பாவத்திற்கு நம்மை அடிமையாக்க கூடாது. இது தேவனைத் துக்கப்படுத்துகிறது காரியம். அப்படி பாவம் செய்தால் தேவனுடைய பாதுகாப்பின் கரம் நீங்கிவிடும்,  பொல்லாங்கன் மனிதனை ஆளுகை செய்வான். எச்சரிக்கையாக இருப்போம். 

தேவனுடைய ஆலயத்தை பரிசுத்தமாக வைப்போம் , நம் சரீரமே அந்த ஆலயம். பரிசுத்தம் இல்லாமல் யாரும் தேவனை தரிசிக்க முடியாது. பரிசுத்தத்தை வாஞ்சிபோம். கர்த்தர் நமக்கு உதவி செய்வார்.ஆமென்.





  :   15 Likes

  :   113 Views