சிலுவை பிரசங்கம்
 /   Blog /  Created by Kingslin R Last updated Thu, 03-Oct-2024



சிலுவை பிரசங்கம்

நாங்களோ சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறோம்;  (I கொரிந்தியர் 1:23)  

உலகத்தில் ஏராளமானோர் பிரசங்கம் செய்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சொல்ல விரும்புவார்கள். தங்களுக்கு நியாயம் என தோன்றுவதை எல்லாம் சொல்வார்கள்.ஆனால் "இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார்" என்ற செய்தி முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. பில்லி கிரகாம் இதை பற்றி இவ்வாறு கூறுகிறார் "நான் அநேகம் பேருக்கு சிலுவையின் நற்செய்தியை பிரசங்கித்து இருக்கிறேன். மக்கள் தேவனோடு சேர்வதை பார்த்து இருக்கிறேன். ஆனாலும் இந்த சாதாரண செய்தி, எப்படி இப்பேற்ப்பட்ட மனம் திரும்புதலை கொண்டு வருகிறது என்பதை நான் அறிந்ததே இல்லை" 

ஆம் அது உண்மை தான். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டார் என்ற...நற்செய்தி....நமக்குள் இருக்கும் எப்பேற்பட்ட நியாயத்தையும் கடிந்து கொள்கிறது. நம்முடைய அறிவுக்கும், புத்திக்கும் எட்டாத வல்லமை அதில் இருக்கிறது என்பதை அதை ருசிக்கும் யாவரும் அறிவார்கள். உண்மையுள்ள நியாயாதிபதி நம் பாவங்களை சிலுவையிலே சுமந்து இருக்கிறார். அதற்கு நன்றி கடன் பட்டு இருக்கிறோம்.நமக்கும் தேவனுக்கும் இடையே பூரண சமாதானத்தை சிலுவையிலே உருவாக்கி இருக்கிறார். 

தேவகுமாரனை அறியாத ஜனம் இங்கும் அங்கும் ஓடி திரிகிறார்கள். ஆனாலும் மெய் சமாதானத்தை அவர்கள் அறியாதபடிக்கு குருடராக இருக்கிறார்கள். அந்த மெய்சமாதானம் சிலுவையின் நற்செய்தியில் இருக்கிறது. ஆனால் இது அநேகருக்கு பைத்தியமாயும், இடறலாயும் இருக்கிறது.ஆனால் நமக்கோ அது கர்த்தருடைய புது பெலனாக இருக்கிறது. ஆமென். 





  :   20 Likes

  :   85 Views