1 கொரிந்தியர் 1:18 "சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்குப் பைத்தியமாயிருக்கிறது, இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபெலனாயிருக்கிறது."
சில மனிதர்களின் வாழ்வில் நடைபெறும் வேதனையான சூழ்நிலையை மற்றவர்களால் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது . அது அந்த கஷ்டத்தை அனுபவிக்கிற மனிதர்கள் மட்டும் தான் உணர முடியும்.
அதுபோல கிறிஸ்துவின் மூலம் தேவன் அருளிய இரட்சிப்பை பெற்றவர்கள், தேவனுடைய இராஜியத்தில் பிறப்பதைக் குறித்து, பவுல், 1 கொரிந்தியரில் எழுதி இருக்கிறார். அதனை அநுபவியாதவர்களால், அதனைப் புரிந்து கொள்ளவது கடினமாயிருக்கும்.
இயேசு கிறிஸ்து, அடிபட்டு, சிலுவையில் அவமானப்பட்டு, வேதனையில் அடைந்த மரணம் நமக்கு இரட்சிப்பை தந்திருக்கிறது என்ற செய்தி முட்டாள்தனமாக தோன்றலாம். ஆனாலும் இந்த முட்டாள்தனத்தைக் குறித்தே பவுல் பிரசங்கம் செய்தார்!
சிலர் ஒரு ராஜாவின் மூலமாகவோ அல்லது அடையாளத்தின் மூலமாகவோ அல்லது தங்களுடைய திறமையான சாதனைகளின் மூலமாகவோ இரட்சிப்பை பெற்றுக்கொள்ள நினைத்தனர் (1 கொரி. 1:22) . ஆனால் தேவன், தம்மை விசுவாசிக்கின்றவர்களும், அதனை அநுபவிக்கின்றவர்களும் மட்டுமே உணரத்தக்கதாக, ஆச்சரியப்படும் வகையில், இரட்சிப்பைக் கொடுத்திருக்கிறார்.
தேவன் தன்னை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்து, அதனையே பாவமன்னிப்புக்கும், ஞானத்திற்கும், வல்லமைக்கும் அடிப்படையாக்கினார். இப்படிப்பட்ட இரட்சிப்பை உணர்ந்த நமக்கு இது தேவ பலமாக ஒவ்வொரு நாளும் இருந்து கொண்டிருக்கிறது. தேவன் கொடுத்த இரட்சிப்புக்காக ஸ்தோத்திரம். ஆமென்.
Write a public review