நாம் தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோமென்று ஆவியானவர் தாமே தம்முடைய ஆவியுடனே கூடச் சாட்சி கொடுக்கின்றார். ரோமர் 8:16
சிலர் வாழ்க்கையில் தன்னம்பிக்கை உள்ளவர்களாக காணப்படுவார்கள் . ஆனால் இந்த தன்னம்பிக்கை, வெறும் முகமூடி போலிருக்கும். உண்மையில், குழப்பமான ஒரு சூழ்நிலை, பயம் உள்ளவர்களாக , தன்னை ஏற்றுக் கொள்ள மாட்டார்களா என்ற ஏக்கம் மற்றும் பல பிரச்சினைகள் இருக்கும்.
உண்மையிலே தேவன் ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் முழுமையாக வரும் பொழுது தேவன் என்னை நிபந்தனையற்ற அன்போடு நேசிக்கின்றார் என்பதை உணர முடியும். மேலும் நான் தேவனை ஒரு போதும் துக்கப்படுத்தக் கூடாது, அவர் என்னை ஒரு போதும் தள்ள மாட்டார் என்ற எண்ணம் உருவாகும்.
இயேசுவை விசுவாசிப்பவர்களிடம் தேவனுடைய ஆவியானவர் என்ன செய்கின்றார் என்பதை ஒருவருடைய மாற்றம் விளக்குகிறது. அவர் நம்மை மிகவும் நேசித்து, பயத்திலிருந்து விடுவிக்கின்றார் (ரோம.8:15,38-39) , நாம் தேவனுடைய பிள்ளைகள் என்பதை உறுதிபடுத்துகின்றார், இந்த உரிமையினால் வரும் அனைத்து நன்மைகளையும் கொடுக்கின்றார் (ரோம 8:16-17, 12:6-8) . அதன் பயனாக நம் எண்ணம் புதிதாவதால், நம்மைக் குறித்து சரியாக பார்க்க முடிகிறது, நம்முடைய சிந்தனையும் புதியதாகின்றது (ரோம12:2-3).
பரமத் தந்தையின் கண்களில், நாம் நேசிக்க படுகிறவர்களாக ,அழகானவர்களாக, திறமைசாலிகளாக பார்க்கப் படுகிறோம். ஆமென்.
Write a public review